மாயார் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் புலி
ஊட்டி, ஆக. 18: ஊட்டி அருகே மாயார் பகுதியில் பகல் நேரங்களில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாயார் கிராமத்தில் சுமார் ஏராளமான குடும்பங்கள்...
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ஊட்டியில் காங். கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
ஊட்டி, ஆக. 15: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டியில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் இதேபோன்ற மோசடி நடந்துள்ளதாக அவர்...
மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்
மஞ்சூர், ஆக.15: மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் துவங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பாபி குத்து விளக்கு ஏற்றி போட்டிகளை துவங்கி வைத்தார். இதில் ஓவியம், பேச்சு,...
சீப்புண்டி- கறிக்குற்றி தார் சாலை அமைக்கும் பணி
பந்தலூர், ஆக. 15: பந்தலூர் அருகே சீப்புண்டி கறிக்குற்றி சாலை பணி துவக்கி வைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பந்தலூர் அருகே எருமாடு கிராமம் சீப்புண்டி முதல் கறிக்குற்றி வரையுள்ள சாலை சீரமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது....
மசினகுடி-சிங்காரா சாலையில் திடீரென தோன்றிய புலி; சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
கூடலூர், ஆக. 14: மசினகுடி சிங்கார சாலையில் திடீரென தோன்றிய புலியால் சுற்றுலா பயணிகள்அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது மசினகுடி. இங்கிருந்து சிங்காரா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் காரில் சென்றனர். அப்போது புதரில் இருந்து கம்பீரமாக புலி ஒன்று வந்தது. இதனை காரில் இருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவில் படம்...
என்சிஎம்எஸ் மண்டபத்தை புதுப்பிக்க கோரிக்கை
ஊட்டி, ஆக. 14: கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் வாசுதேவன் தலைமை வகத்தார். பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி முகமது இஸ்மாயில், யசோதா செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து...
வனவிலங்குகள் நடமாட்டம் குன்னூர் டாஸ்மாக் குடோனை ஊட்டிக்கு மாற்ற வலியுறுத்தல்
ஊட்டி, ஆக. 14: நீலகிரி மாவட்டத்தில் லோடிங் மற்றும் அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) நீலகிரி மாவட்ட பேரவை கூட்டம் ஊட்டியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஹசன் வரவேற்றார். சுமை சங்க நிர்வாகி மணிகண்டன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர்...
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல்
கோத்தகிரி, ஆக. 13: கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்ட பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்கள் கொண்டதாக உள்ளது. இதனால், சிறுத்தை, கரடி, காட்டுமாடு, புலி, யானை, உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் வீட்டில் வளர்க்கும்...
அத்திமாநகர் குடியிருப்புக்குள் காட்டு யானை நடமாட்டம்
பந்தலூர், ஆக. 13:பந்தலூர் அருகே அத்திமாநகர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை நடமாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அத்திமாநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. யானையை பார்த்த மக்கள் யானையிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு...