பழங்குடியின மக்களுக்கு வீடுகள் குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

  ஊட்டி, ஜூலை 8: வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி தருவது தொடர்பாக சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டி தருதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு...

மஞ்சூர் பிக்கட்டியில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்

By Arun Kumar
07 Jul 2025

  மஞ்சூர், ஜூலை 8: மஞ்சூர் அருகே பிக்கட்டியில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் ஊட்டி தெற்கு ஒன்றியம் (கிழக்கு) திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டுகள்...

சிறுபான்மையினருக்கு ரூ.25 ஆயிரம் மோட்டார் தையல் இயந்திரங்கள்

By Arun Kumar
07 Jul 2025

  ஊட்டி, ஜூலை 8: ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் மின்மோட்டார் தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில்...

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

By Arun Kumar
06 Jul 2025

  பந்தலூர், ஜூலை 7: பந்தலூர் அருகே உப்பட்டியில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், உப்பட்டியில் ஷாலோம் தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஷாலோம் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குநர் விஜயன் சாமுவேல் தலைமை வகித்து பேசுகையில், ‘‘கிராமப்புற...

கூட்டத்தில் புகுந்த வேன்; பிளஸ்2 மாணவி பலி

By Arun Kumar
06 Jul 2025

  பாலக்காடு, ஜூலை 7: திருச்சூர் அருகே மாணவிகள் கூட்டத்திற்குள் வேன் புகுந்து பிளஸ்-2 மாணவி பலியானார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே வடக்கேத்தொரவு பகுதியைச் சேர்ந்த மோகன்-ரமா தம்பதி. இவர்களது மகள் வைஷ்ணா (17). இவர் புதுக்காடு நந்திக்கரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து...

தொடர் மழையால் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் குன்னூர் காட்டேரி அணை

By Arun Kumar
06 Jul 2025

  ஊட்டி, ஜூலை 7: தொடர் மழையால் காட்டேரி அணை முழுமையாக நிரம்பி, ரம்மியமாக காட்சி அளிக்கிறது.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி அணை உள்ளது. இந்த அணையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காட்டேரி அணையில் இருந்து தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பருவ...

பூத்துகுலுங்கும் எவர்லாஸ்ட் மலர்கள்

By Arun Kumar
05 Jul 2025

  ஊட்டி, ஜூலை 6: ஊட்டி- மஞ்சூர் சாலையோரத்தில் பூத்துகுலுங்கும் எவர்லாஸ்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலும் அவ்வப்போது சில மலர்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக, குறிஞ்சி மலர்கள், ஜெகரண்டா, சேவல் கொண்டை மலர்கள், டேலியா, பிளேம் ஆப்தி பாரஸ்ட் போன்ற...

உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் ஓடைகரை பாதுகாப்பு பணிகள் வேளாண்மை பொறியியல் துறை ஆய்வு

By Arun Kumar
05 Jul 2025

  பந்தலூர், ஜூலை 6: பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை...

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி

By Arun Kumar
05 Jul 2025

  குன்னூர், ஜூலை 6: இரண்டாம் கட்ட சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு பணி நேற்று முதல் துவங்கியது.  நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா செயல்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காக்கள் சுற்றுலா பயணிகளை...

கறி பீன்ஸ் விலை கிடுகிடு கிலோ ரூ.100க்கு விற்பனை

By Arun Kumar
04 Jul 2025

  ஊட்டி,ஜூலை5: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கறி பீன்ஸ் விலை கிலோ ரூ.100ஐ எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயமே செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி, குன்னூர் மற்றும்...