அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் கீழ்நாடு காணி சாலையை சீரமைக்க கோரிக்கை

  கூடலூர், அக்.29: கூடலூரில் இருந்து நாடு காணி கீழ்நாடு காணி வழியாக கேரள மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நாடு காணி துவங்கி தமிழக எல்லை வரையுள்ள சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த சில வருடங்களாக உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பல்வேறு...

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

By Arun Kumar
27 Oct 2025

  ஊட்டி, அக். 28: ஊட்டிகலெக்டர் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வருடமும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த...

சுப்பிரமணிய சாமி கோயிலில் சூரசம்ஹாரம்

By Arun Kumar
27 Oct 2025

  ஊட்டி,அக். 28: ஊட்டி சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி நடக்கிறது. ஊட்டி லோயர் பஜார் சாலையில் உள்ள இந்த கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் இந்த உற்சவம்,அறம், பக்தி, அன்பு ஆகியவற்றின் இணைப்பாக திகழ்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன்கந்தசஷ்டி...

ஏணியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

By Arun Kumar
27 Oct 2025

  பாலக்காடு, அக். 28: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு கரிங்கல் அத்தாணியைச் சேர்ந்த முனீர்-ஷகனா தம்பதியின் மகன் மஷில்முகமது (7). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்.23ம் தேதி பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ஏணியில் ஏறி விளையாடியபோது, கால்தவறி மாணவர் கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த மாணவரை உடனடியாக ஆசிரியர்கள்...

அவரை விலை குறையாததால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

By Suresh
25 Oct 2025

ஊட்டி, அக். 25: ஊட்டி அவரை விலை கிலோ ரூ.120க்கு விற்பனை ஆவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், பூண்டு, காலிபிளவர், பீன்ஸ், பட்டாணி மற்றும் ஊட்டி அவரை ஆகியவை அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இதில், ஊட்டி...

குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம்: ஊசிமலை காட்சிமுனை 2 வது நாளாக மூடல்

By Suresh
25 Oct 2025

கூடலூர், அக். 25: ஊசிமலை காட்சிமுனை பகுதியில் குட்டியுடன் நடமாடும் இரண்டு காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக இரண்டாவது நாளாக நேற்றும் மூடப்பட்டது. காட்சிமுனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கூடலூர்- ஊட்டி சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. யானைகள்...

புத்தகங்களை வாசித்து உலகை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ஊட்டி புத்தக திருவிழாவில் வலியுறுத்தல்: மாவட்ட நிர்வாகம் ரூ.150 கூப்பன்

By Suresh
25 Oct 2025

புத்தக திருவிழாவை காண நாள்தோறும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள், இந்த புத்தக கண்காட்சியை காண வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மாணவர்களின் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில் இம்முறை முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.150க்கு கூப்பன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள...

கூடலூர் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி செய்துதர கோரிக்கை

By Ranjith
23 Oct 2025

கூடலூர்,அக்.24: கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் வயதான மற்றும் பெண் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி செல்கின்றன. பயணிகள் அமர்வதற்கு இடவசதி இருந்தும், போதிய இருக்கைகள்...

ஆலவயலில் இன்டர்லாக் சாலை அமைக்கும் பணி தீவிரம்

By Ranjith
23 Oct 2025

கூடலூர் அக் 24: கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலவயல் பகுதியில் பேரூராட்சி சார்பில் இன்டர்லாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சியின் 15வது வார்டு ஆலவயல் பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாவது தெரு சாலைகள் பேரூராட்சியின் சிறப்பு நிதி 2025-26ன் கீழ் 240 மீட்டர் தூரத்திற்கு புதிய இன்டெர்லாக்...

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By Ranjith
23 Oct 2025

மதுரை, அக். 24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில், நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் கோரிக்கை விளக்கவுரை வழங்கினார். மதுரை மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள்...