மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6.67 கோடியில் எத்தனால் உற்பத்தி பிரிவு சீரமைப்பு பணி இன்று துவக்கம்; 2 அமைச்சர்கள் பங்கேற்பு
நாமக்கல், செப்.3: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6.67 கோடியில் எத்தனால் உற்பத்தி பிரிவு சீரமைப்பு பணிகள் துவக்க விழா இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:...
பல்லாங்குழி சாலையை சீரமைக்க நடவடிக்கை
நாமகிரிப்பேட்டை, செப்.2: வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையம் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம், மின்னக்கல் பஞ்சாயத்து வடுகம்பாளையம் 6வது வார்டு, கீழ் தெருவில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் சிறிது நேரம் மழை பெய்தால்...
துணை மின்நிலைய பகுதிகளில் மின்நிறுத்தம் தேதி அறிவிப்பு
பள்ளிபாளையம், செப்.2:மின்வாரிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த மாதம் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் நாள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாட்களில் அப்பகுதியில் உள்ள துணை மின்நிலைய பகுதிகளில் உள்ள கம்பங்களில் மரக்கிளைகள் மோதுதல், மின்மாற்றிகளில் ஆயில் மாற்றம், தாழ்வான...
மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை
நாமக்கல், செப்.2:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாநகரில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் வீசியது. கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றின் வேகமும்...
செம்மண் வெட்டி கடத்தல்
சேந்தமங்கலம், ஆக.30: கொல்லிமலை அடிவாரத்தில் ஆற்றங்கரையில் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன், டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான நடுக்கேம்பை ஊராட்சி பாண்டியாறு கரையில் உள்ள செம்மண்ணை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெட்டி கடத்திக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
நாமக்கல், ஆக.30: நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் யாழ்நகரை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவர் முதலைப்பட்டியில் ஜூஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றார். பிரசன்னாவின் பெற்றோர் வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். அவர்கள் நேற்று காலை, கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து...
கந்தசாமி கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு
மல்லசமுத்திரம், ஆக.30: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று ஆவணி வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, மூலவர் கந்தசாமிக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாரதனை நடந்தது. கோயில் உட்பிரகாரத்தில் வள்ளி-தெய்வானையுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,...
ரூ.4.52 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
பரமத்திவேலூர், ஆக.29: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 17 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.66க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.59க்கும், சராசரியாக ரூ.56.59க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 581க்கு ஏலம்...
திட்டப்பணிகள் தொடக்க விழா
நாமக்கல், ஆக.29:ஆண்டாபுரம் அரசு பள்ளியில், புதிய திட்டப்பணியை எம்பி மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார். மோகனூர் ஒன்றியம், ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி...