சின்ன வெங்காயம் மரவள்ளிக்கு காப்பீடு

ராசிபுரம், நவ.1: ராசிபுரம் வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், ரபி பருவத்திற்கு சின்ன வெங்காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என, ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர் காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்கு பருவ மழைகளுக்கு...

பழுதடைந்த மின்கம்பம் அகற்றம்

By Karthik Yash
31 Oct 2025

நாமகிரிப்பேட்டை, நவ.1: வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் அருகேயுள்ள வடுகபாளையம் பகுதியில் இருந்து, மல்லூர் செல்லும் சாலையில், சேதமடைந்த நிலையில் மின்கம்பம் இருந்தது. இந்த மின்கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின்கம்பத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து படத்துடன் செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து...

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி

By Karthik Yash
30 Oct 2025

ராசிபுரம், அக்.31: நாமக்கல் மாவட்ட அளவிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவை, ராசிபுரம் தனியார் பள்ளியில் நேற்று சிஇஓ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்து வருகிறது. நாமக்கல்...

2 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

By Karthik Yash
30 Oct 2025

நாமக்கல், அக்.31: நாமக்கல் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தின் மூலம், முதியவர்களின் வீடு தேடிச் சென்று 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், ரேஷன் கடைகள் மூலம், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள்...

தி.கோடு பஸ் ஸ்டாண்டில் தவித்த முதியவர் மீட்பு

By Karthik Yash
30 Oct 2025

திருச்செங்கோடு, அக்.31: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில், முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு மருத்துவ உதவி மற்றும் உணவு தரப்பட்டது. முதியவருக்கு சுமார் 80 வயதிருக்கும். பசி மயக்கத்தில் அவர் மயங்கியது...

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

By Karthik Yash
29 Oct 2025

சேந்தமங்கலம், அக்.30: நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட மணல் கடத்தப்பட்டு வருவதாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை அடுத்த ஏழூர் பிரிவு...

ரூ.2.23 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

By Karthik Yash
29 Oct 2025

மல்லசமுத்திரம், அக்.30: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், ஆத்துமேடு, மதியம்பட்டி, பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 113 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை...

ரிக் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

By Karthik Yash
29 Oct 2025

திருச்செங்கோடு, அக்.30: மத்திய பிரதேச மாநிலம் கரியாடோலா மாவட்டத்தை சேர்ந்தவர் கிரகலாட் குமார்(37). இவர் திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த கிளாப்பாளையத்தை சேர்ந்தவரின், ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இவரது தம்பி, மத்திய பிரதேசத்தில் இறந்து விட்டார். இதற்காக சென்றவர் கடந்த 27ம் தேதி மீண்டும் திருச்செங்கோடு வந்தார்....

புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது

By Karthik Yash
28 Oct 2025

பரமத்தி வேலூர், அக்.29: நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் டோல்கேட் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் ராசப்பன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்குள்ள இட்லி மாவு விற்பனை செய்யும் கடை மற்றும் பெட்டிக்கடையில் தமிழக அரசால்...

கோயில் நிலத்தில் பனைவிதைகள் நடவு

By Karthik Yash
28 Oct 2025

குமாரபாளையம், அக்.29: குமாரபாளையம் சண்முகவேலாயுத சுவாமி கோயில் நிலத்தில் 2500 பனை விதைகள் நடவு பணிகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சண்முக வேலாயுதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2500 பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பனைவிதை...