அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு
குமாரபாளையம், ஆக.6: தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்ற செம்மொழியாம் தமிழ்மொழி போட்டியில் அறநெறிக்கதைகளை சொல்லிய அரசு பள்ளி மாணவி சந்தோஷிக்கு, அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் செம்மொழியாம் தமிழ்மொழி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி சந்தோஷி...
ரூ.8.37 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை
திருச்செங்கோடு, ஆக.6: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் எள் ஏலம் நடந்தது. 32 மூட்டை ரூ.2.93 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ.150.30 முதல் ரூ.150.40 வரையிலும், சிவப்பு எள் ரூ 67.70 முதல் ரூ.88.80 வரையிலும், வெள்ளை எள் ரூ.79 முதல் ரூ.130.60 வரையிலும் விற்பனையானது. சினனசேலம் பகுதியிலிருந்து எள்...
மாநகராட்சியில் கைத்தறி கண்காட்சி
நாமக்கல் ஆக.5: நாமக்கலில் வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 11வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு “நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில்” வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி காலை...
பேராசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
நாமக்கல், ஆக.5:குமாரபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவர், மாணவர் அசோசியேசனில் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி எங்களிடம் ரூ.1300 மற்றும் ரூ.1900 வீதம் மொத்தம் ரூ.1.92 லட்சம் வசூல் செய்தார். அவர் கல்லூரி நிர்வாகத்திடம்...
தேடப்படும் குற்றவாளி குறித்து போஸ்டர்
பள்ளிபாளையம், ஆக.5: நாமக்கல் மாவட்டம், மொளசி காவல்நிலைய எல்லையில் கடந்த 2010ல் வீடு புகுந்து நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த வீரப்பனம் மகன் சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சுப்பிரமணி...
ஜெர்மன் மொழித்தேர்வு பயிற்சி
நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஜெர்மன் மொழித்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும்....
அம்மன் கோயில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்
பள்ளிபாளையம், ஆக.3: ஆடி பெருக்கை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்தகுடங்களுடன் வழிபாடு நடந்தது. ஆடி பெருக்கு நாளில் பள்ளிபாளையத்தில், காவிரிகரையோரங்களில் உள்ள முனியப்பன் கோவில்களில் திருவிழா நடைபெறும். கண்ணனூர் மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடமெடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இது தவிர காகித ஆலை காலனி...
34 கோழிகளை குதறி கொன்ற தெருநாய்கள்
பள்ளிபாளையம், ஆக.3: பள்ளிபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள், அங்கிருந்து 34 கோழிகளை கடித்து குதறி கொன்றது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சமய சங்கிலி ஊராட்சி, தொட்டிபாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார், தனது தோட்டத்தில் 34...
கோரையில் தீப்பிடித்து சாம்பல்
பரமத்திவேலூர், ஆக.2: ரமத்தி வேலூரை அடுத்த அணிச்சம்பாளையம் பகுதியில் பாய் தயாரிக்கும் கோரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோரை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்....