ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, ஆக.2: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 66 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ரூ.206 முதல் ரூ.239 வரையிலும், 2ம் தரம் ரூ.150.10 முதல் ரூ.185.75 வரையிலும் விற்பனையானது. ஆகமொத்தம் ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....

ரூ.50.52 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

By Karthik Yash
31 Jul 2025

மல்லசமுத்திரம், ஆக.1: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் 1646 மூட்டைகள் கருமனூர், கோட்டப்பாளையம், மாமுண்டி, மதியம்பட்டி, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்து தரம் வாரியாக குவித்தனர். ஏலம் எடுக்க சேலம், ஈரோடு, கோவை, அவினாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த...

மணற்கேணி செயலி குறித்து செயல்விளக்கம்

By Karthik Yash
31 Jul 2025

சேந்தமங்கலம், ஆக. 1: புதுச்சத்திரம் அருகே, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லியாயிபாளையம் அரசு தொடக்க பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ்நாடு...

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

By Karthik Yash
31 Jul 2025

நாமகிரிப்பேட்டை, ஆக.1: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒரு நாள் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை அருகே ஆயில்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம், மாவட்டத்திற்குள் விவசாயிகள் ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை உரையாற்றினார். கால்நடை மருத்துவர் இளையராஜா...

அம்மன் கோயிலில் துணிகர திருட்டு

By Karthik Yash
30 Jul 2025

சேந்தமங்கலம், ஜூலை 31: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த எஸ்.நாட்டாமங்கலம் கிராமத்தில், மோர் தாண்டிய அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கோயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது....

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

By Karthik Yash
30 Jul 2025

திருச்செங்கோடு, ஜூலை 31: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரிகள் முன்பு மாணவ, மாணவிகளிடம் ஓரணியில் தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, விண்ணப்பங்களையும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், தாமரைச்செல்வன்,...

தபால் அலுவலகங்களில் 2ம் தேதி சேவைகள் ரத்து

By Karthik Yash
30 Jul 2025

நாமக்கல், ஜூலை 31: நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் தரம், வரும் 4ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமும் இன்றி செயல்படுத்த வசதியாக, வரும் 2ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின்...

ரூ.11.39 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை

By Karthik Yash
29 Jul 2025

திருச்செங்கோடு, ஜூலை 30: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், எள் 74 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதில் கருப்பு எள் கிலோ ரூ.112.80 முதல் ரூ.142.90 வரையிலும், சிவப்பு எள் ரூ.60.80 முதல் ரூ.124.90 வரையிலும், வெள்ளை எள் ரூ.79 முதல் ரூ.130.60 வரை விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.5.25 லட்சத்திற்கு...

ராசிபுரம் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

By Karthik Yash
29 Jul 2025

ராசிபுரம், ஜூலை 30: ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம்- சேலம் சாலை அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு வழக்கறிஞர்கள் வழக்கிற்காக நேற்று ஆஜராக வந்திருந்தனர். இந்நிலையில், திருப்பூரில் வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு...

வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை பலகை வைப்பு

By Karthik Yash
28 Jul 2025

  நாமக்கல், ஜூலை 29: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுமையாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர...