எருமப்பட்டி பிஎஸ்என்எல் ஆபீசில் 36 பேட்டரி திருட்டு

சேந்தமங்கலம், ஜூலை 29: எருமப்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 36 பேட்டரிகள் திருட்டு ேபானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எருமப்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள செல்போன் டவர் செயல்பட்டு வருகிறது. அதற்காக புதிய பேட்டரிகளை பொருத்தி விட்டு, பழைய 36 பேட்டரிகள் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த...

திருநங்கைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்

By Karthik Yash
28 Jul 2025

நாமக்கல், ஜூலை 29: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருச்செங்கோடு தாலுகா வரகூராம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, கூட்டப்பள்ளி குடித்தெரு மற்றும் அருந்ததியர் காலனியில், 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம்...

ரூ.40 லட்சத்தில் சாலை சிறுவர் பூங்கா சீரமைப்பு

By MuthuKumar
27 Jul 2025

சேந்தமங்கலம், ஜூலை 28: கொல்லிமலை மாசிலா அருவியில் சிறுவர் பூங்கா, சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மாசிலா அருவியில் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் எளிதாக சென்று குளித்து வர...

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By MuthuKumar
27 Jul 2025

பரமத்திவேலூர், ஜூலை 28: காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதி மக்களுக்குவருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியாற்றில் 98 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின்...

நீர், நிலம் மாசுபடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது

By MuthuKumar
27 Jul 2025

நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என்றும், இது தொடர்பாக மக்களிடம் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள லத்துவாடியில், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில்,...

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்

By Ranjith
25 Jul 2025

  நாமக்கல், ஜூலை 26: நாமக்கல்லில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்....

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா

By Ranjith
25 Jul 2025

  பள்ளிபாளையம், ஜூலை 26: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸின் 87வது பிறந்தநாள் விழா நேற்று பள்ளிபாளையத்தில் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் உமாசங்கர், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அக்ரஹாரம் காசிவிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு வழங்கினர். பள்ளிபாளையம் அரசு...

ரூ.125.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

By Ranjith
25 Jul 2025

  நாமக்கல், ஜூலை 26: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.125 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், நாமக்கல் மாநகராட்சி வார்டு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளில்...

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்

By MuthuKumar
24 Jul 2025

நாமக்கல், ஜூலை 25: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் துவங்கியது. நாமக்கல், துறையூர், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 16 மூட்டைகளில் 575 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். நாமக்கல், கொடுமுடி, ஆண்டாபுரம் போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில்...

ஜார்கண்ட் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

By MuthuKumar
24 Jul 2025

பள்ளிபாளையம்,ஜூலை 25: கடத்தல்காரர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார், அவற்றை கோர்ட் மூலம் ஜார்கண்ட் தொழிலாளர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் தம்தரா மாவட்டம் சபன்பூர் போர்வா கிராமத்தை சேர்ந்தவர் இர்பான் அன்சாரி(20). இவரது உறவினர்கள் ஜாசிம் அன்சாரி, அர்பாஜ் அன்சாரி, இர்சாத் அன்சாரி,...