நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்
நாமக்கல், ஜூலை 25: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் துவங்கியது. நாமக்கல், துறையூர், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 16 மூட்டைகளில் 575 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். நாமக்கல், கொடுமுடி, ஆண்டாபுரம் போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில்...
ஜார்கண்ட் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
பள்ளிபாளையம்,ஜூலை 25: கடத்தல்காரர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார், அவற்றை கோர்ட் மூலம் ஜார்கண்ட் தொழிலாளர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் தம்தரா மாவட்டம் சபன்பூர் போர்வா கிராமத்தை சேர்ந்தவர் இர்பான் அன்சாரி(20). இவரது உறவினர்கள் ஜாசிம் அன்சாரி, அர்பாஜ் அன்சாரி, இர்சாத் அன்சாரி,...
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க காலை, மாலை சிறப்பு பயிற்சி
நாமக்கல், ஜூலை 25: நாமக்கல் அரசு பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். 30 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இது சுமார் 125 ஆண்டுகள்...
தாய், மகளிடம் நகை பறித்த வாலிபர் கைது
நாமக்கல், ஜூலை 24: மோகனூர் அருகே காரில் வந்து தாய், மகளிடம் நகை பறித்த, திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கோமதி (49). இவரது மகள் பவித்ரா (26). இருவரும் நேற்று முன்தினம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு, முசிறியில் உள்ள உறவினர்...
விதிகளை மீறி நீர்நிலைகளில் மண் திருடும் மர்ம கும்பல்
நாமகிரிப்பேட்டை, ஜூலை 24: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், விதிகளை மீறி நீர் நிலைகளில் மண் திருடும் கும்பல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து முன்கூட்டியே...
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு
நாமக்கல், ஜூலை 24: வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை, தேவையான நேரத்தில் நல்ல விலையில் விற்பனை செய்து, வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல, வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன....
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலஉதவிகள்
திருச்செங்கோடு, ஜூலை 23: எலச்சிப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்று, நல உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தொடங்கி வைத்தார். எலச்சிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த...
ரூ.46 லட்சத்திற்கு ஆடு, கோழி விற்பனை
சேந்தமங்கலம், ஜூலை 22: எருமப்பட்டி அடுத்த பவித்திரம், செவ்வந்திப்பட்டி சந்தைகளில் ரூ.46 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரு ஆட்டுச்சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயம்புத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்ட பகுதியான...
பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு வேலைக்கு செல்லக்கூடாது
நாமக்கல், ஜூலை 23: நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான இளைஞர்கள் படிக்கும்போதே, பாஸ்போர்ட் எடுக்க தொடங்கி விடுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து லண்டன், துபாய், சிங்கப்பூர்...