பள்ளிபாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற தாய், மகன் கைது

பள்ளிபாளையம், செப். 25: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி(48). இவரது மகன் மனிஷ்குமார்(28). இவர்கள் கடந்த 20 வருடங்களாக, வெப்படையை அடுத்துள்ள ஆத்திகாட்டூரில் தங்கியுள்ளனர். ரேணுகாதேவி மளிகை கடை வைத்துள்ளார். மனிஷ்குமார் பீகாரில் உள்ள தொழிலாளர்களை வரவழைத்து, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோலூம் ஆலைகளில் வேலைக்கு அமர்த்தி வந்தார். இவர்களின் மளிகை...

நாமக்கல் அருகே ஓடும் காரில் திடீர் தீ

By Karthik Yash
24 Sep 2025

நாமக்கல், செப். 25: நாமக்கல் கங்காநகரை சேர்ந்தவர் அருள்முருகன் (47). இவர் கொடிக்கால்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது காரில் எருமபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு வந்து சொண்டிருந்தார். தூசூர் ஏரிக்கரை பகுதியில் கார் வந்த போது, காரின் முன்புறம் இருந்து புகை வருவதை பார்த்து...

சேந்தமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது

By Karthik Yash
24 Sep 2025

சேந்தமங்கலம், செப். 25: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி மேதர்மாதேவி பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி விஜயலட்சுமி, வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனபால் (51), விவசாயி. இவரது மகன் யுவராஜ் (20), கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி குடும்பத்தினருக்கும், தனபால் குடும்பத்தினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது....

மின்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

By Karthik Yash
23 Sep 2025

நாமக்கல், செப்.24:நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்...

ரூ.2.70 கோடிக்கு மாடுகள் விற்பனை

By Karthik Yash
23 Sep 2025

சேந்தமங்கலம், செப்.24: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம், திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். மாடுகளை வாங்க -விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள்...

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

By Karthik Yash
23 Sep 2025

நாமக்கல், செப்.24: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அளிக்கப்பட...

திருச்செங்கோட்டில் கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் குண்டாஸில் கைது

By Karthik Yash
22 Sep 2025

நாமக்கல், செப்.23: திருச்செங்கோட்டில், கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அணிமூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, கள்ளச்சாராயம்...

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி வீட்டை இடித்தவர் கைது

By Karthik Yash
22 Sep 2025

நாமகிரிப்பேட்டை, செப்.23: நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி வீட்டை இடித்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி மாவாறு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(55). விவசாயியான இவரது அக்கா சரோஜாவிற்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் சுமார் 3 செண்ட் நிலத்தில், சுப்ரமணி வீடு கட்டி...

புதுச்சத்திரம் அருகே கோயில் முன் நிழற்கூடம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

By Karthik Yash
22 Sep 2025

நாமக்கல், செப்.23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுச்சத்திரம் ஒன்றியம் எஸ்.உடுப்பம் ஊராட்சி பி.கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு முன் தகர சீட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், சிலர் வருவாய்த்துறை...

நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

By Ranjith
21 Sep 2025

நாமக்கல், செப்.22: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி விழா இன்று(22ம் தேதி) தொடங்குகிறது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். வரும் 1ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோயிலில் இன்று(22ம் தேதி) மச்ச...