ரூ.68 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், நவ.22: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் மங்களம், மேல்முகம், பீமரப்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடையுள்ள 15 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் ரூ.120. முதல் ரூ.180.50 வரையும்,...

கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி

By Karthik Yash
22 Nov 2025

திருச்செங்கோடு, நவ.22: திருச்செங்கோடு வட்டாரம், கருமாபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் மூலம், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு ரபி பருவ பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பட்டுவளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் கௌசல்யா, பட்டுவளர்ச்சி துறை மானியத்திட்டங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மல்பெரி சாகுபடி பற்றிக்கூறினார்....

பழுது பார்க்க நிறுத்தி வைத்த லாரி திருட்டு

By Karthik Yash
21 Nov 2025

நாமக்கல், நவ.21: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே விசுவாம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி, நாமக்கல் - பரமத்திரோட்டில் உள்ள கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுதுபார்க்க தனது லாரியை செந்தில்குமார் நிறுத்தினார். பட்டறையில் போதுமான இடவசதி இல்லாததால், பட்டறைக்கு அருகில் உள்ள...

சாக்கடை அடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுநீர்

By Karthik Yash
21 Nov 2025

திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு அருகே, சாக்கடை தூர்வாராததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், 87.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில், விசைத்தறிகள் அதிகமுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்,...

மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

By Karthik Yash
21 Nov 2025

ராசிபுரம், நவ.21: ராசிபுரம் ஒன்றிய பகுதியில், மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, திமுக குடும்ப நல நிதியை மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வழங்கினர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, கலைஞர் குடும்ப நல நிதியை ராஜேஸ்குமார் எம்பி வழங்கி வருகிறார். தற்போது, ராசிபுரம்...

அனுமதியின்றி கற்களை வெட்டிய 2 டிராக்டர், இயந்திரம் பறிமுதல்

By Karthik Yash
18 Nov 2025

ராசிபுரம், நவ.19: ராசிபுரம் அருகேயுள்ள சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் மாயகண்ணன். இவரது தோட்டத்தில் அனுமதியின்றி வெடி வைத்து, பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கற்களை வெட்டி...

ரூ.5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

By Karthik Yash
18 Nov 2025

நாமக்கல், நவ.19:நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள், 230 மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க...

இளையபெருமாள் கோயிலில் சிறப்பு யாகம்

By Karthik Yash
18 Nov 2025

திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு தாலுகா, இறையமங்கலம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் (எ) இளைய பெருமாள் சுவாமி கோவிலில் விஷ்ணு புண்யகால சிறப்பு யாகம் நடைபெற்றது. மலைமீது வீற்றிருக்கும் இளையபெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் கருடாழ்வாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இளையபெருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு,...

கலெக்டர் ஆபீஸ் முன் வாலிபர் திடீர் தர்ணா போலீசார் சமரசம்

By Karthik Yash
17 Nov 2025

நாமக்கல், நவ.18: ராசிபுரம் தாலுகா, கார்கூடல்பட்டி ஊராட்சி மெட்டாலாவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலககம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மெட்டாலா பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, ஒரு தனிநபர் கட்டிடம் கட்ட முயன்றார். இதுகுறித்து வருவாய்த் துறைக்கு நான் தகவல்...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

By Karthik Yash
17 Nov 2025

நாமக்கல், நவ. 18: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஜல்லிக்கட்டு விழா குழுவினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கைகாட்டியில் வரும் ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் பொதுமக்கள்...