மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவிகள் சாதனை
பரமத்திவேலூர், அக்.24: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள மணியனூர் கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளியில், கொங்கு சஹோதயா பள்ளி கூட்டமைப்பு (சிபிஎஸ்இ) சார்பில் வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி...
பள்ளிபாளையத்தில் 3,593 மரக்கன்றுகள் நடவு
பள்ளிபாளையம், அக்.24: பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும், இந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தட்டாங்குட்டை, எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், களியனூர், களியனூர் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பல்லக்கா பாளையம், புதுப்பாளையம், சமயசங்கிலி, பாப்பம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில்...
பட்டாசு கழிவுகளை அகற்றிய பணியாளர்கள்
திருச்செங்கோடு, அக்.23: திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். பட்டாசு கழிவுகள் தெருவில் கிடந்தன. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, கமிஷனர் வாசுதேவன் உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலர் சோலை ராஜா தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஒட்டு மொத்தமாக பட்டாசு கழிவுகளை அகற்றும்...
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை
சேந்தமங்கலம், அக்.23: எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில், கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கைக் கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் இந்திரா நகர் பகுதி மக்கள், கலெக்டர் துர்காமூர்த்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொட்டிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் மற்றும் இந்திரா நகர் குடியிருப்புகளில், மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீர்...
ரூ.3.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மல்லசமுத்திரம், அக்.23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு மங்களம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மேல்முகம், கொளங்கொண்டை, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 132 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு...
சேதமடைந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
நாமகிரிப்பேட்டை, அக்.18: வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் வழியாக மல்லூர் செல்லும் சாலையில், வடுகம்பாளையம் பகுதியில் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின் கம்பத்தின் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு...
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல், அக்.18: நாமக்கல்லில் மாநகர அதிமுக சார்பில், அதிமுகவின் 54வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் சந்தைபேட்டை புதூரில் உள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு, மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள...
அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல், அக்.18: நாமக்கல் அருகே உள்ள பழையபாளையத்தில் அதிமுக 54வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில அதிமுக வர்த்தக அணி இணைசெயலாளர் தேவி மோகன் கலந்துகொண்டு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்...
பனை விதை நடும் விழா
திருச்செங்கோடு, அக். 17: தமிழ்நாடு அரசு நடத்திய பனை விதை நடும் விழா, திருச்செங்கோடு வட்டூர் ஏரியில் நடைபெற்றது. தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் வளர்ப்பதின் முன்னெடுப்பாக திருச்செங்கோடு வட்டூர் ஏரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் முன்னிலை வகித்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு...