ஆடு திருடிய 4பேர் கைது
சேந்தமங்கலம், ஆக. 21: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி ராசாக்கவுண்டன் புதூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவரது மனைவி ராணி (45). இவருக்கு சொந்தமான ஆடுகள் தோட்டத்தின் அருகில் உள்ள நைனாமலை வனப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு ஓடி ெசன்று ராணி, பார்த்தபோது 4பேர் 2...
சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், ஆக.21: நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 28ம் தேதி மாலை...
சிஐடியு தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.20: மின் வாரிய அலுவலகம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, நேற்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பான சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முருகேசன்,...
ஜனநாயக மாதர் சங்க மாநாடு
நாமக்கல், ஆக. 20: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சத்திர பிரதேச குழு மாநாடு நாமக்கல் அருகே ஏளூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோமதி தலைமை வகித்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அரசு பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில், உரிய பாதுகாப்பு வழங்குவதை...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ராசிபுரம், ஆக.20: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம் பேரூராட்சி பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பட்டா பெயர் மாற்றம், மின்சார சேவை, இ சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடிநீர்...
ரூ.1.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம், ஆக.19:ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் அக்கரைபட்டியில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. 47 பருத்தி மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஆர்.சி.எச் ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால், ரூ.6500க்கும், அதிகபட்சமாக ரூ.7300க்கும் விற்பனையானது. சுரபி ரகம் குறைந்தபட்சமாக ரூ.9689க்கும், அதிகபட்சமாக ரூ.9729க்கும், கொட்டு பருத்தி குறைந்தபட்சம் ரூ.4700க்கும், அதிகபட்சமாக ரூ.5000க்கும் விற்பனையானது. மொத்தமாக 47 மூட்டைகள் ரூ.1.50...
அரசு பஸ்- லாரி மோதல்
நாமக்கல், ஆக.19:நாமக்கல்லை அடுத்த கருங்கல்பாளையம் தேசிய நெடுங்சாலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த அரசு பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்டர் மீடியன் அருகில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஜங்களாபுரத்தை சேர்ந்த பரமசிவம் (28) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து நல்லிபாளையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த...
சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.19: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை தொழிலாளர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற...
கள்ளச்சாராய தடுப்பு குறித்து எஸ்பி ஆய்வு
நாமக்கல், ஆக.18: நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் காவல் நிலைய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேளுக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பழனியப்பர் கோயில் மலை அடிவார பகுதிகளிலும், மங்களபுரம் பகுதியில் உரம்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி ஆகிய...