தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 5: நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி சார்பில், தமிழக அரசின் நான்காண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் அன்பழகன் வரவேற்றார். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர்கள் பூலாவரி ஜெயவேல்,...

மர்ம விலங்கு கடித்து 28 பன்றிகள் உயிரிழப்பு

By Karthik Yash
04 Jul 2025

மல்லசமுத்திரம், ஜூலை 5: மல்லசமுத்திரம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 28 வளர்ப்பு வெண் பன்றிகள் உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி பூசாரிக்காட்டில் வசிப்பவர் சதீஷ்(47). விவசாயி. இவர் சொந்தமாக அரசு அனுமதி பெற்று, இவருடைய தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், 500க்கும் மேற்பட்ட வெண் பன்றிகள் வளர்ப்பை, கடந்த 2013ம்...

நாமக்கல்லில் திமுக உறுப்பினர் சேர்க்கை

By Karthik Yash
03 Jul 2025

நாமக்கல், ஜூலை 4: ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை நேற்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்படி, நாமக்கல்லில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, மக்களுடன் ஸ்டாலின் ஆன்லைன் செயலி முலம் தன்னை திமுகவில் உறுப்பினராக புதுப்பித்து கொண்டார். அதைத்தொடர்ந்து திமுக...

ஆனி திருமஞ்சன விழா

By Karthik Yash
03 Jul 2025

பரமத்திவேலூர், ஜூலை 4: பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று தேவாரம் திருவாசகம் ஓதூதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. விழாவையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் மற்றும்...

ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை

By Karthik Yash
03 Jul 2025

ராசிபுரம்,, ஜூலை 4: வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் பகுதியில், சேமூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சேலம், சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து பல்வேறுஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. தண்ணீர் நிரம்பிய பிறகு ஆத்துமேடு வழியாக பரமத்திவேலூர் பகுதியில், உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சேலம் பகுதியில் பெய்த...

கடையில் 3டன் இரும்பு திருடிய 4 பேர் கைது

By Suresh
02 Jul 2025

பரமத்திவேலூர், ஜூலை 3: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி சுவாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் வேகவுண்டம்பட்டியில் நாமக்கல்-சாலையில் இரும்பு மற்றும் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் 30ம் தேதி காலை வழக்கம் போல், காலை...

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற பெண்

By Suresh
02 Jul 2025

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் அருகே வேட்டாம்பாடியை சேர்ந்தவர் ஜிலானி (43). இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு ரூ.6லட்சம் கடன் வாங்கினார். அதற்காக புரோநோட்டு எழுதிக் கொடுத்துள்ளார். இதுவரை அசலும், வட்டியுமாக ரூ.13லட்சம் வரை...

வெற்றிலை கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரிப்பு

By Suresh
02 Jul 2025

பரமத்திவேலூர், ஜூலை 3: பரமத்திவேலூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள வெற்றிலை கொடிக்காலில், செம்பியன், மாவு பூச்சி தாக்குதல் நோய் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட மோகனூர் வரையிலான பகுதிகளில், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில்...

கஞ்சா விற்ற லாரி டிரைவர் கைது

By Karthik Yash
01 Jul 2025

சேந்தமங்கலம், ஜூலை 2: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (49). லாரி டிரைவரான இவர், லாரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ தமிழ்குமரன் மற்றும்...

மத உணர்வுகளை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது

By Karthik Yash
01 Jul 2025

நாமக்கல், ஜூலை 2: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ்(29). பாஜ ஐடி விங்க் நிர்வாகியான இவர், தனது சங்கி பிரின்ஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில், கடந்த 25ம் தேதி தனியார் டிவியில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி, மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் தகவல்...