2 லாரிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது
பரமத்திவேலூர், அக்.28: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் நிறுவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது இரண்டு...
மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபர்
நாமக்கல், அக்.28: நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் கதிர்வேல் (78), விவசாயி. இவரது மனைவி காமாட்சி (75). இவர் கடந்த பிப்ரவரி 16ம்தேதி அதிகாலை சிறுநீர் கழிக்க வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி, அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்று, அவர்...
பவித்திரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவு
சேந்தமங்கலம், அக்.28: எருமப்பட்டி அடுத்த பவித்திரம், செவ்வந்திப்பட்டி வாரச்சந்தைகளில் நேற்று ஆடுகள், நாட்டுக்கோழிகள் விற்பனை குறைந்தது. ரூ.45 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டி பகுதிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரு ஆட்டு சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியில்...
அதிமுகவினர் 36 பேர் திமுகவில் இணைந்தனர்
திருச்செங்கோடு, அக். 26: கபிலர்மலை வடக்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் 12 பெண்கள் உள்பட 36 பேர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம் ஏற்பாட்டில் நேற்று, திருச்செங்கோட்டில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்திக்கு...
தெருநாய்கள் பிடிக்கும் பணி மீண்டும் துவக்கம்
பள்ளிபாளையம், அக்.26: பள்ளிபாளையம் நகராட்சியில் எஞ்சியள்ள தெருநாய்களை பிடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது. 10 நாட்களில் 406 நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெளியில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதாகவும், வீதிகளில் படுத்திருக்கும் நாய்கள் கூட்டமாக சென்று பொதுமக்கள், கால்நடைகளை கடித்து ஆபத்தை ஏற்படுத்துவதாக, நகராட்சி கூட்டத்தில்...
தண்டவாளத்தில் தலை வைத்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை
நாமக்கல், அக். 26: சென்னையில் இருந்து மோகனூருக்கு நேற்று காலை ரயிலில் வந்த ஐடி நிறுவன ஊழியர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள குமடிபாளையத்தைச் சேர்ந்த ராஜவேலு மகன் கவீன்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்...
சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
நாமக்கல், அக்.25: நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினார்கள். நாமக்கல் கோட்டை ரோடு உழவர் சந்தை எதிரே செல்லும் பொய்யேரி கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள். மேலும்,...
ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்
நாமகிரிப்பேட்டை, அக்.25: வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் நாடார் தெரு மெயின் ரோடு முதல் குடிநீர் தொட்டி வரை, தார்சாலை அமைக்கும்...
100 மரக்கன்றுகள் நடும் பணி
சேந்தமங்கலம், அக்.25: புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்துகொண்டு 100 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், ஊராட்சியில் உள்ள...