மின்கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி

சேந்தமங்கலம், நவ.11: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே வளப்பூர் நாடு ஊராட்சி, பெரியகோயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ(55), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சிவக்குமார். நேற்று மாலை, சிவக்குமார் வீட்டில் மின் விளக்கு எரியவில்லை. இதயைடுத்து, சிவக்குமார் தனது வீட்டில் மின்விளக்கு எரியவேண்டி, விவசாயி ராஜூவை அழைத்து மின் கம்பத்தின் மீது ஏறி,...

விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், புரோக்கர் கைது

By Suresh
10 Nov 2025

திருச்செங்கோடு, நவ.11: திருச்செங்ேகாடு அருகே, விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.திருச்செங்கோடு புறநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருமகவுண்டம்பாளையம், அம்மையப்பா நகர் பகுதியில் வீடு எடுத்து, பாலியல் தொழில் செய்து வருவதாக திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,...

மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய அரசு பள்ளி

By Suresh
10 Nov 2025

பள்ளிபாளையம், நவ.11: பள்ளிபாளையம், வெப்படை, வெடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட நூற்புஆலைகளும், ஆட்டோ லூம் நெசவாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பிறமொழி குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வகையில், தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையுடன்,...

கொட்டும் மழையில் தீ மிதித்த பக்தர்கள்

By Karthik Yash
06 Nov 2025

ராசிபுரம், நவ.7: ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில், தேர்த்திருவிழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 4ம் தேதி அதிகாலை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பூசாரி முன் வரிசையாக பக்தர்கள் நின்று சாட்டையடி...

ரூ.59.94 லட்சம் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை

By Karthik Yash
06 Nov 2025

நாமக்கல், நவ.7: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.59.94 லட்சம் மதிப்பிலான 10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையில், விதை ஆய்வாளர்கள், தொடர்ந்து விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து...

நாமக்கல் சிஇஓ பொறுப்பேற்பு

By Karthik Yash
06 Nov 2025

நாமக்கல் நவ.7: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, கடந்த 4 ஆண்டாக பணியாற்றி வந்த மகேஸ்வரி, சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த எழிலரசி (58), பதவி உயர்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்....

ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

By Karthik Yash
04 Nov 2025

நாமக்கல், நவ.5: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், வேடசந்தூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்....

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

By Karthik Yash
04 Nov 2025

நாமக்கல், நவ.5: முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் இலவச தையல் இயந்திரம் பெற நவம்பவர் 25க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, விதவையர், திருமணம் ஆகாத மகள்கள் இருப்பின், மத்திய, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில்...

நாமக்கல் தனியார் ஓட்டலில் லிப்டில் சிக்கிய இருவர் மீட்பு

By Karthik Yash
04 Nov 2025

நாமக்கல், நவ.5: நாமக்கல்-திருச்சி ரோட்டில் தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலில் லிப்ட் வசதி உள்ளது. இந்நிலையில், அங்கு பணிபுரியும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹரேஷ்(34) என்பவர் முதல் தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறியுள்ளார். அவருடன் ஓட்டலுக்கு சாப்பிட வந்த துத்திகுளத்தைச் சேர்ந்த அசோக்குமார்(42) என்பவரும் லிப்டில் சென்று உள்ளார். அப்போது, சேப்டி பின் திடீரென...

காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம்

By Karthik Yash
31 Oct 2025

நாமக்கல், நவ.1: நாமக்கல் மாநகர காங்கிரஸ் சார்பில், நேரு பூங்காவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்து இந்திரா காந்தி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மாநகர தலைவர் மோகன், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, நாமக்கல்...