படைவீடு பேரூராட்சியில் 40 குடும்பங்களுக்கு வீட்டு மனை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம், செப்.12: படைவீடு பேரூராட்சி பகுதியில் நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிபாளையம் ஒன்றியம், படைவீடு பேரூராட்சியில் வசிக்கும் 40 குடும்பங்களை சேர்ந்த நிலமற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடத்தை நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில்...
அரசுப் பள்ளிகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு
நாமக்கல், செப். 12: சேலம் அண்ணா நிர்வாக கல்லூரி சார்பில், மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முன் ஓய்வு தொடர்பான மூன்று நாள் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் நடந்தது. பயிற்சி வகுப்பை சேலம் அண்ணா நிர்வாக கல்லூரியின் துணை ஆட்சியர் மாறன் மற்றும் உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்....
ஓட்டலில் தீ விபத்து: பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு உதவித்தொகை
பள்ளிபாளையம், செப்.11: பள்ளிபாளையம் கீழ்காலனி பகுதியில் கீதா-சீனி தம்பதியினர் கடந்த 15 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர். கடந்த 7ம்தேதி இந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. பெரும் பொருட்சேதத்திற்குள்ளான நிலையில் இந்த தம்பதியினரை திருச்செங்கோடு நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், அருள்ராஜ், மாரியப்பன்,...
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
நாமக்கல், செப்.11:நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தமிழக அரசின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சவுக்கு, தேக்கு, மகாகனி ஆகிய மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படுவோர், மாவட்டத்தில் உள்ள 15 வட்டார தோட்டக்கலைத்துறை...
2 மணி நேரம் பலத்த மழை
சேந்தமங்கலம், செப்.11: புதன்சந்தை சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தை, மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, சர்க்கார் உடுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதிகளில் நிலக்கடலை, மக்காச்சோளம் பயிரிட்டு, செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் காய்கள் பிடிப்பதற்கு...
திருச்செங்கோட்டில் ரூ.1 லட்சத்திற்கு எள் விற்பனை
திருச்செங்கோடு, செப்.10: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 15 மூட்டை எள் ரூ.1.08 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ 121.70 வரையிலும், சிவப்பு எள் ரூ.106.20 முதல் ரூ.117.60 வரையிலும், வெள்ளை எள் ரூ.108.80 வரையிலும் விற்பனையானது. தலைவாசல், ஆத்தூர், குமாரபாளையம் பகுதியிலிருந்து அதிகளவில் எள் வரத்து இருந்தது. 11...
சேந்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு தினம் அனுசரிப்பு
சேந்தமங்கலம், செப்.10: சேந்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீரசுந்தரலிங்கம், இம்மானுவேல் சேகரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் கர்ணன், ராஜா, ராகவன் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் செல்வராஜ், முருகேசன், அம்மையப்பன், வெங்கடேஷ்...
நாமகிரிப்பேட்டையில் ரூ.13 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டை, செப்.10: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வன்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் நாமக்கல்லில் நடக்கிறது
நாமக்கல், செப்.3:நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 9,10ம் தேதிகளில்...