திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி கோரி வழக்கு: அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவு
மதுரை, அக். 31: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மேலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை வசதிகள் நடைமுறையில்...
குறுக்கே பாய்ந்தது மாடு டூவீலர் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு
மதுரை, அக். 30: மதுரையில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டின் மீது டூவீலர் மோதிய விபத்தில், அதனை ஓட்டிச்சென்ற இளைஞர் பரிதாபமாக பலியானார். மதுரை, நரிமேடு சிங்கராயர் காலனி விரிவாக்கம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் மணிகண்டன்(35). இவர் நேற்று புதுநத்தம் ரோடு வழியாக ஐயர்பங்களாவிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து பனங்காடி...
குறுக்கே பாய்ந்தது மாடு டூவீலர் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு
மதுரை, அக். 30: மதுரையில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டின் மீது டூவீலர் மோதிய விபத்தில், அதனை ஓட்டிச்சென்ற இளைஞர் பரிதாபமாக பலியானார். மதுரை, நரிமேடு சிங்கராயர் காலனி விரிவாக்கம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் மணிகண்டன்(35). இவர் நேற்று புதுநத்தம் ரோடு வழியாக ஐயர்பங்களாவிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து பனங்காடி...
பள்ளபட்டி பாலாற்றில் உருவாகும் தடுப்பணை கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்
மதுரை, அக். 30: திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறு, செந்துறை, திருச்சி மாவட்டம் தெத்தூர் வழியாக கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டியை கடந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்கிறது. இதனுடன், சிறுமலையில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களை கடந்து சிங்கம்புணரியில் பாலாற்றுடன் கலந்து, அங்கிருந்து திருப்புத்தூர் பெரிய கண்மாயை அடைகிறது. பாலாறு பயணிக்கும் திசையில்...
மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
சோழவந்தான், அக். 29: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கம்மாள் (81). திருமணமாகாத இவர், கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி. இவரது உறவினரான மகேஸ்வரி என்பவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை வீட்டின் அருகே படுத்திருந்த ராக்கம்மாள் மீது, சில மர்ம நபர்கள் மண்ெணண்ணெய் ஊற்றி...
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மதுரை, அக். 29: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மதுரை மாவட்டத்தில் 48 நெற்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரே...
காந்திமியூசியத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி
மதுரை, அக். 29: மதுரை காந்தி மியூசியம் சார்பில் அக்.31 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் குறுந்தானிய உணவுகள், குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் சர்வ சமய வழிபாட்டில்...
ட்ரோன் பறக்க தடை துணை ஜனாதிபதி வருகை
மதுரை, அக். 28: கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரைக்கு நாளை (அக்.29) விமானத்தில் வருகை தருகிறார். பிறகு 30ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல உளள்ளதால், மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் 29...
முதியவர் பரிதாப சாவு
மதுரை, அக். 28: மதுரை, தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ராஜகோபால்(76), உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் கழிப்பறை சென்றபோது தவறி விழுந்து காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். ...