நடத்துநர்களுக்கு பதவி உயர்வு

  மதுரை, ஜூலை 6: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் உள்ளன. இவற்றில் உள்ள பேருந்துகளில் பணியாற்றும் 30 நடத்துநர்களுக்கு பயணச்சீட்டு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் சரவணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டல பொது மேலாளர்கள்...

யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் உடனடி ரத்து: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

By Arun Kumar
05 Jul 2025

  மதுரை, ஜூன் 6: மதுரை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால், அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உர விற்பனையானளர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 200 தனியார் உரக்கடைகள் உள்ளன....

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

By Arun Kumar
04 Jul 2025

  வாடிப்பட்டி, ஜூலை 5: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் கார்த்திகேயன் (27). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கார்த்திகேயன் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதனால் நேற்று...

உசிலம்பட்டி அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்தல்: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

By Arun Kumar
04 Jul 2025

  உசிலம்பட்டி ஜூலை 5: உசிலம்பட்டி அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்திச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இந்த ரேஷன் டையிலிருந்து...

குடற்புழு நோய்த்தடுப்பு வழிமுறைகள்

By Arun Kumar
04 Jul 2025

  மதுரை, ஜூலை 5: மாடுகளின் குடற்புழு நோய் தடுப்பு குறித்து கால்நடைத்துறை பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘மாட்டு கொட்டகைகளில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். சாணம் மற்றும் அசுத்தங்களை முறைப்படி அகற்ற வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சாணப்பரிசோதனை செய்து ஒட்டுண்ணி இருந்தால் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் ெதாட்டிகளைத் தினமும்...

இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

By Arun Kumar
03 Jul 2025

  மதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட காரில் வைத்திருந்த 10 சவரன் நகை மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, வழக்கு பதியப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிழந்தார். இதையடுத்து போலீசாரை கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் உள்ள கலெக்டர்...

ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

By Arun Kumar
03 Jul 2025

  மதுரை, ஜூலை 4: மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் மணிகண்டன்(45), மாட்டுத்தாவணி பேருந்து நிலைய ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோ ஸ்டாண்ட் முன்பாக நின்றிருந்தபோது ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றியுள்ளார். இதனை மணிகண்டன் கண்டித்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டனை சரமாரியாக தாக்கிய அவர் தப்பினார்....

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்: பேரையூர் அருகே பரபரப்பு

By Arun Kumar
03 Jul 2025

  பேரையூர், ஜூலை 4: பேரையூர் அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரையூர் அருகே அனுப்பபட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த...

விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா

By Karthik Yash
02 Jul 2025

மதுரை, ஜூலை 3: வைகை நதியின் குறுக்கே கடந்த 1975ல் கலைஞர் முதல்வராக இருந்த போது ரூ.18.77 லட்சம் மதிப்பில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 84 கண்மாய்களை நிரப்பி, 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக விரகனூர் மதகணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டபோதே விநாயகர் கோயிலும் உருவாக்கப்பட்டது....

பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்

By Karthik Yash
02 Jul 2025

மதுரை, ஜூலை 3: மதுரை கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களில் அவர்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி பேரையூர் வட்டம் மொக்கத்தான் பாறையில் இன்று (ஜூலை 3) காலையிலும், அழகம்மாள்புரத்தில் மதியமும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலூர் வட்டம் வலையபட்டி கிராமத்தில் நாளையும்,...