அக்.27ம் தேதி நடக்கிறது மாநகர் மாவட்ட திமுக சார்பில் மருது சகோதரர்கள் குருபூஜை: கோ.தளபதி எம்எல்ஏ அறிக்கை
மதுரை, அக். 25: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தெப்பக்குளத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த மாமன்னர்கள்...
நோயாளிகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறை திறப்பு: விரைவில் எலும்பு மஜ்ஜை பிரிவு
மதுரை, அக். 25: மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவு நேற்று புதிதாக தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிக்காக ரத்தவியல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அருள் சுந்தரேஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், மருத்துவக்...
மரக்கன்று, பனை விதை நடவுக்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தகவல்
மதுரை, அக். 25: மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுடன், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மதுரையில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோகிணி உத்தரவின் பேரில், மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் மற்றும்...
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை, அக். 24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில், நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் கோரிக்கை விளக்கவுரை வழங்கினார். மதுரை மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள்...
2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை அக். 24: மதுரையை சேர்ந்த இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை, நாராயணபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் லிங்கராஜ் (20). இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் இவர்...
தனிப்படையினர் சோதனையில் ரயில்களில் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சா சிக்கியது
மதுரை, அக். 24: மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனை வாயிலாக ரயில்களில் கடத்திய 16 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதலானது. ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க, மாவட்ட எஸ்பி அறுவுறுத்தலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணத்தாள் தலைமையிலான தனிப்படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில்...
காருடன் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
சோழவந்தான், அக். 23: சோழவந்தானில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் கருப்பட்டி பிரிவு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த சாக்கு மூட்டையில் 8 கிலோ...
காவலர் வீரவணக்க நாளையொட்டி காவல் விழிப்புணர்வு வாகனம் போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்
மதுரை, அக். 23: மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் அக்.21ம் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு நாள் காவலர் வீர வணக்க நாளாக தமிழக அரசு...
வடமதுரை டூ செங்குறிச்சிக்கு பஸ்கள் இயக்க வேண்டும் அனைத்து தரப்பினர் கோரிக்கை
வடமதுரை, அக். 23: வடமதுரை- செங்குறிச்சி இடைய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செங்குறிச்சி கிராமம். இந்த வழித்தடத்தில் மற்றும் சுற்றுப்புறங்களில் ஊத்தங்கரை, V.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம், ஆலம்பட்டி, காட்டுப்பட்டி, கம்பிளியம்பட்டி, வல்லம்பட்டி, குடகிப்பட்டி, சடையம்பட்டி ஆகிய கிராமங்கள்...