விதி மீறும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் மேம்பாலங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமா?
மதுரை, ஜூலை 2: விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக மேம்பாலங்களில் அதி வேகத்திலும், ஒருவழிப்பாதையிலும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரையின் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு...
விரகனூர் மதகணையில் ஆய்வு
மதுரை, ஜூலை 2: வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் பூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு வாயிலாக பாசன வசதி பெறும் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பெரிய கண்மாய், ஏனாதி கோட்டை கண்மாய், குடீயூர் கண்மாய், மரிச்சுகட்டி மற்றும் வன்னிக்குடி கண்மாய்கள் ஆகியவற்றுக்கான...
வருவாய் கோட்டாட்்சியர் பணியிட மாற்றம்
மதுரை, ஜூலை 2: மதுரை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஷாலினி. இவர் தற்போது சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மதுரை முன்னாள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார். இவர் தற்போது மதுரை மாநகராட்சி...
ஊதிய உயர்வு, காலிப்பணியிடம் நிரப்பக் கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மதுரை, ஜூலை 1: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணிகளை புறக்கணித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில்...
வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு வரவேற்பு நிகழ்வு
மதுரை, ஜூலை 1: வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலத்துறை, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கோமதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி.அல்லி, புதிய ஆசிரியர்களை வாழ்த்தி, வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொலைநோக்கு பார்வை மற்றும்...
வரி விதிப்பு தொடர்பான சிறப்பு முகாம் இன்று துவங்கி 3 நாட்கள் நடக்கிறது
மதுரை, ஜூலை 1: மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி, காலிமனை வரி விதிப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு, தொழில் உரிமம், விளம்பர...
மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பிரசாரம்: கோ.தளபதி எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை, ஜூன் 30: மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் மதுரை செல்லூர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகர்...
கஞ்சா விற்ற 9 பேர் கைது
மதுரை, ஜூன் 30: மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் எஸ்ஐ சுந்தரபாண்டியன் மற்றும் போலீசாருக்கு, பெத்தானியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை தீவிரமாக நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இரு குழுக்களாக பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு சுண்ணாம்பு காளவாசல் பகுதியை கண்காணித்தனர். அப்போது கார் மற்றும் பைக்கில் வைத்து சிலர் கஞ்சா விற்பனை...
அரசின் பாசன வேளாண் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: மதுரையில் நடைபெற்றது
மதுரை, ஜூன் 30: தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வேளாண்மைக்குத் தேவையான நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தி, விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான சந்தை வாய்ப்புகள் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி உதவி மற்றும் தமிழக அரசின் பங்குடன் சேர்த்து...