கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள் குன்றத்து கோயிலில் கந்தசஷ்டி திருவிழா
அக்.22ம் தேதி துவங்குகிறது திருப்பரங்குன்றம், அக். 14: அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது பக்தர்கள் காப்பு கட்டி கோயிலுக்கு உள்ளேயும் தங்களது இல்லங்களிலும் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி...
முதியவர் பிணமாக மீட்பு
மதுரை, அக். 14: மதுரை, கீழவெளிவீதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவர் நடத்தி வரும் சாயப்பட்டறையில் கூலித்தொழிலாளியயாக இருந்தவர் பழனி (60). இவர் வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால், சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், வண்டியூர் விஏஓ...
நிலையூர் கால்வாயில் புதர்களை அகற்றலாம்
மதுரை, அக். 13: வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சோழவந்தானை அடுத்த முள்ளிபள்ளம் தடுப்பணையிலிருந்து துவங்கும் நிலையூர் கால்வாய் வழியாக பாணாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுகட்டான், நெடுங்குளம், பெருங்குடி கண்மாய்கள் மற்றும் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்களுக்கு செல்கிறது. இக்கால்வாய்களில் தென்கரை துவங்கி சுமார் 15 கி.மீ தூரத்திற்கு ரூ.13.50 கோடியில் தாழ்வான பகுதிகளில் சீரமைப்பு...
மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் விறுவிறு இலக்கை நோக்கி சீறிய காளைகள்
மேலூர், அக். 13: மேலூர் அருகே நடைபெற்ற இரண்டு மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி 46 ஜோடி காளைகள் சீறிப்பாய்ந்ததை திரளான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில், 7ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் முசுண்டகிரிப்பட்டி முதல் ஆமூர் விலக்கு வரை நேற்று நடைபெற்றது. இதில் பெரிய...
துவரிமான் கண்மாயை தூர்வார ெபாதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுரை, அக். 13: மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது துவரிமான் கண்மாய் இதன் வாயிலாக சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைக்க கண்மாயின் நடுவே 50 ஏக்கர் மண் மேவி மூடப்பட்டது. இதன் பிறகு இந்த...
சாலை போக்குவரத்து விழிப்புணர்வுக்காக சூரியன் எப்எம் நடத்திய டிராஃபிக்ல ஜாமிங்
மதுரை, அக். 12: சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் எப்எம் மதுரை காளவாசல் சிக்னலில் நடத்திய டிராஃபிக்ல ஜாமிங் என்ற புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் பண்பலை வானொலி நேரலை நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, பல்வேறு...
டூவீலர்கள் மோதியதில் சமையல் மாஸ்டர் பலி
திருமங்கலம், அக். 12: திருமங்கலம் சியோன்நகரை சேர்ந்தவர் ரவீந்திரன்(66). சமையல் மாஸ்டர். இவர் தனது மகள் சத்யாவுடன் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரவீந்திரன் திருமங்கலத்திற்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சியோன்நகர் சர்ச் அருகே மெயின் ரோட்டில் குறுக்கே கடக்க...
மதுரை காமராஜர் பல்கலையில் நீதிபதி பரிந்துரைப்படி பதவி உயர்வு வேண்டும்: பேராசிரியர்கள் சங்கம் கோரிக்கை
திருப்பரங்குன்றம், அக். 12: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்குவதில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக நீதியரசர் தலைமையிலான கமிட்டி விசாரித்து பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பேராசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், கடந்த 2017 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் பதவி உயர்வில்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
அலங்காநல்லூர், அக். 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் அலங்காநல்லூரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச...