மதுரை- தேனி சாலையை சீரமைக்க வேண்டும்
மதுரை, டிச. 3: மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மதுரை-தேனி மார்க்கத்தில் முடக்குச்சாலை சந்திப்பில் ரூ.53.95 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதுடன், எச்எம்எஸ் காலனி முதல் நாகமலைபுதுக்கோட்டை வரை ரூ.260...
மதுரையில் துணிகரம் ஜாமீனில் வந்தவர் குத்திக்கொலை
மதுரை, டிச. 2: மதுரை, மீனாட்சிபுரம் பகுதியில், ஜாமீனில் வந்தவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரை ஒரு குற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன்,...
சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மதுரை, டிச. 2: மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வாகன விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. வாகனங்களை இயக்குவோர், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததால் மட்டுமே விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதன்படி, தலைக்கவசம்...
முதியோருக்கு வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் இன்றும் நாளையும் ஏற்பாடு
மதுரை, டிச. 2: முதியோருக்கு வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் இன்றும் (டிச.2) நாளையும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரவீன்குமார் கூறி இருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது கடந்த முதியோரின் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 65...
சோழவந்தான் ரயில் நிலையத்தில் மயிலை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும்
சோழவந்தான், டிச. 1: சோழவந்தான் ரயில் நிலையத்தில், மீண்டும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் சோழவந்தானும் ஒன்று. இப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில்களில்...
மனிதர்களுக்கான சத்துக்களுக்கு மண்வளம் காப்பது அவசியம்: வேளாண் துறையினர் தகவல்
மதுரை, டிச. 1: மனித உயிர்களுக்கு தேவையான சத்துக்கள் சரிவிகித அளவில் கிடைக்க, மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதன்படி மண் வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் செம்மண், கரிசல் மண், வண்டல் மண், களர் மண், உவர் மற்றும் அமிலத்தன்மை கொண்ட மண் என பல்வேறு...
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்கம் டிச.18ல் உண்ணாவிரதம்: மாநில செயற்குழுவில் தீர்மானம்
மதுரை, டிச. 1: மதுரையில் நேற்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், மாவட்ட செயலாளர் சந்திரபோஸ்...
அரசு கல்லூரி மாணவிகள் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
மதுரை, நவ. 29: மதுரையை அடுத்த கள்ளந்திரி பகுதியில் மீனாட்சி அரசு ெபண்கள் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் வானதி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இணைப்பேராசிரியர் மீனாட்சி வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரான உதவி பேராசிரியர்...
மாங்குளம் சாலையில் சிறுபாலங்கள் சீரமைக்க கோரிக்கை
மதுரை, நவ. 29: மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டியிலிருந்து லட்சுமிபுரம் வழியாக கிடாரிபட்டி வரை செல்லும் சாலை 10 கி.மீ தூரம் கொண்டது. இச்சாலையில் பூசாரிபட்டி, ஜோதியாபட்டி, லட்சுமிபுரம் விலக்கு, சின்ன மாங்குளம், மாங்குளம் என, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், லட்சுமிபுரம் விலக்கிலிருந்து கிடாரிபட்டி செல்லும் திசையில் மாங்குளத்தில்...