விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல்

மதுரை, அக்.8: திருமாவளவன் எம்பி கார் மீது பைக் மோதியதாக கூறி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மதுரை ஒத்தக்கடையில் விசிகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன்...

ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு பயணிகள் இருவர் படுகாயம்

By Francis
06 Oct 2025

  மதுரை, அக். 7: மதுரையில், ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக பலியானார். அதிலிருந்த இரு பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(50). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த 2 பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்....

மதுரை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவில்லா டிக்கெட் ரூ.1 கோடிக்கு விற்பனை பண்டிகை காலம் எதிரொலி

By Francis
06 Oct 2025

  மதுரை, அக். 7: ஆயுத பூஜை விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பினர். இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை கோட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனையில் ரூ.1.03 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பண்டிகை...

முன் விரோதம் எதிரொலி அடுத்த வீட்டு மின்வயரை துண்டித்த வாலிபர் கைது

By Francis
06 Oct 2025

  திருமங்கலம், அக். 7: கள்ளிக்குடி அருகேயுள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் பால்சாமி.. இவரது மனைவி மீனா (72). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆறுமுகத்தம்மாள் (50). இவரது நாத்தனார் பாகாதாளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி மீனா 1.5 சென்ட் இடம் வாங்கி அதில் வீடு கட்டி தற்போது குடியிருந்து வருகிறார். தங்களது...

நோய் தாக்குதலில் இருந்து வாழையை காப்பாற்றலாம் வேளாண் துறையினர் வழிகாட்டல்

By Ranjith
04 Oct 2025

மதுரை, அக். 4: நோய் தாக்குதலில் இருந்து வாழையை எளிதில் காப்பாற்றலாம் என, வேளாண் துறையினர் கூறியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழையில் முடிக்கொத்து நோய் அதிக அளவில் காணப்படும். இது ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் தாக்கப்பட்ட வாழை மரங்களின் இலைகள் சிறுத்தும், மஞ்சள் நிறம் மற்றும்...

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

By Ranjith
04 Oct 2025

மதுரை, அக். 4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன் அப்துல் காதர், ரகுபதி, ஜெயபாஸ்ர், சுரேஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை...

கள்ளிக்குடி பகுதியில் பருவ மழைக்கு முன்பாக நடவுப் பணிகள் தீவிரம்: வழிபாட்டுடன் தொடங்கிய விவசாயிகள்

By Ranjith
04 Oct 2025

கள்ளிக்குடி, அக். 4: கள்ளிக்குடி பகுதியில் எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக நாற்று நடும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. அப்போது மதுரை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும், பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவில் மழை இல்லாமல் போனது....

உண்மைக்கும், எளிமைக்கும் முக்கியத்துவமளித்த மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்தவர் மகாத்மா: நாளை (அக்.2) காந்தி பிறந்த தினம்

By Ranjith
30 Sep 2025

மதுரை: நாளை(அக்.2) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், மற்ற நகரங்களை விடவும் காந்தியடிகள் மதுரையை, இவ்வூர் மக்களை பெரிதும் நேசித்தார். இதன் வெளிப்பாடாகவே சமய நூல்களையும் அறிஞர்களின் நூல்களையும் படித்து ‘அகிம்சை தான் உயர்ந்த தர்மம்’ என உணர்ந்து இதையே கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தி அகிம்சை முறையில் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர் மகாத்மா காந்தியடிகள்....

ஐஐடி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

By Ranjith
30 Sep 2025

மதுரை: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் ஒன்றிய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவியர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50...

அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்

By Ranjith
30 Sep 2025

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி விஏஒ அன்புநிதி (41). இவர் நேற்று முன்தினம் அலுவலகப் பணியில் இருந்த போது,சோமங்கலம் கண்மாயில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மருதங்குடி திருமால் பிரிவு அருகே விஏஓ மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆய்வுக்காக நின்றிருந்தனர். அப்போது...