ராமநாதசுவாமி கோயில் திருவிழா மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்
மதுரை, ஜூலை 22: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் ஆடி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, மதுரை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நாளை (ஜூலை 23) மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி மதுரை சந்திப்பில் இருந்து ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நாளை...
மாநில ஹாக்கி, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பாராட்டு
மதுரை, ஜூலை 21: மாநில ஹாக்கி, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களை, கலெக்டர் பிரவீன்குமார் பாராட்டினார். தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கிப்போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணியினர், கேவிடி பள்ளி அணியை 2-1 என்ற...
சிறப்புக்காவல் பிரிவின் கழிவு வாகனங்கள் பொது ஏலம்: நாளை மறுநாள் நடக்கிறது
மதுரை, ஜூலை 21: மதுரையில் நாளை மறுநாள் தமிழ்நாடு சிறப்புக்காவல் பிரிவில் கழிவு வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன. இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சிறப்புக்காவல் 6ம் அணி, மதுரை புதுநத்தம் ரோட்டில் உள்ள அலுவலக வளாகத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் உள்ளன. இவற்றை பொது ஏலத்தில் விட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே...
மாவட்ட வனப்பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள்
மதுரை, ஜூலை 21: மாவட்ட வனத்துறை தரப்பில் எட்டு வனச்சரகங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. மதுரை மாவட்ட வனத்துறை சார்பில், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும் மாவட்ட வன அலுவலர் தருண்குமார் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் உள்ள கொடிமங்கலம், பெருமாள்மலை. இலந்தைகுளம்,...
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது வழக்கு
மதுரை, ஜூலை 20: மதுரையில் வாலிபருக்கு கொலை மிரட்ட விடுத்ததாக வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக்(29). இவர் வழக்கு ஒன்றிற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது வக்கீல் செல்வக்குமார், கார்த்திக் நிறுத்தியிருந்த டூவீலர் சாவியை பறித்துக்கொண்டார். இது குறித்து அவர் வக்கீல் சங்க நிர்வாகிகளிடம்...
முடுவார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர், எம்எல்ஏ பார்வையிட்டனர்
அலங்காநல்லூர்: பாலமேடு அருகே முடுவார்பட்டி மந்தை வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி, கலைசெல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி வரவேற்றார். இந்த முகாமில் மகளிர் உரிமை...
கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது
மதுரை: மதுரை சுண்ணாம்பு காளவாசல் ரயில்வே டிராக் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஜய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ மோகன்லால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கீரைத்துறையை சேர்ந்த ரமேஷ்(23), ஜெய்ஹிந்த்புரம் அஜய்(20) எனத்தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த...
ஆரப்பாளையம் தடுப்பணையில் ரூ.65 லட்சத்தில் ஷட்டர்கள்
மதுரை, ஜூலை 19: வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்து மதுரை மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகரில் ஆரப்பாளையம், கல்பாலம் மற்றும் ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆரப்பாளையத்தில் ரூ.11.90 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில், இரண்டு ஷட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. முல்லைப் பெரியாறு...
நாகமலை அருகே வாலிபர் வெட்டிக் கொலை
திருப்பரங்குன்றம், ஜூலை 19: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் நேற்று காலை சுமார் 30 வயதுள்ள ஆணின் உடல் முகம், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் கிடந்தது. அருகில் சில மது பாட்டில்களும் காணப்பட்டன. தகலறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், உடலை கைப்பற்றி...