கட்டுமான பொருட்கள் மீது பச்சை வலையால் மூடப்பட வேண்டும்
மதுரை, ஜூலை 25: புதிய கட்டுமானங்களுக்கான பொருட்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்க, பச்சை வண்ண வலை கொண்டு மூட வேண்டுமென மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அறிக்கை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் நடைபெறும்போது, கொண்டு செல்லப்படும், சேகரித்து வைக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் காற்றில் பறந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி...
சைபர் குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மதுரை ஜூலை 25: மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் உள்ள கல்லூரியில். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல் சைபர் குற்றங்களில் பெண்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்....
மதுரையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரை, ஜூலை 24: மதுரையில் இன்று (ஜூலை 24) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மாநகராட்சியின் 7 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக 4 இடங்களில் நடக்கிறது. இதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் வார்டு 8, வார்டு 11 ஆகிய பகுதிகளுக்கு சர்வேயர் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இந்த முகாம் நடக்கிறது. மண்டலம்...
மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு: மேயர், கமிஷனர் பங்கேற்பு
மதுரை, ஜூலை 24: மதுரை, கரும்பாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக இரு வகுப்பறை கட்டிடங்கள் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டன. இவற்றை மேயர் இந்திராணி, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, கோ.தளபதி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். தொடர்ந்து மேயர், கமிஷனர்...
மதுரையில் பரபரப்பு ரூ.3.74 கோடி ஹவாலா பணம், கார் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
மதுரை ஜூலை 24: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில், சட்டவிரோதமாக ஒரு கும்பல் ஹவாலா பணத்தை காரில் வைத்து கை மாற்றுவதாக விளக்குத்தூண் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் பணத்தை கைமாற்றும் வேலையில் இருந்த...
தெரு நாய்களுக்கு உணவளித்த தாய், மகளுக்கு கொலை மிரட்டல்
மதுரை, ஜூலை 23: மதுரையில் தெரு நாய்களுக்கு உணவளித்த இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரை புதுநத்தம் ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் ஆர்த்தி(41). இவர் தனது மகளுடன் அய்யர் பங்களா பகுதிக்கு சென்றார். அங்கு சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் உள்ளிட்டோர்...
மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
மதுரை, ஜூலை 23: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையொட்டி அவரது மறைவிற்கு மதுரை மாநகர் மற்றும் புறநகர் சிபிஎம் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ்...
கோயில் நிதி கையாடல் குறித்து கேஷியரிடம் விசாரணை
மதுரை, ஜூலை 23: அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் கோயில் நிர்வாகம் சார்பில் ராக்காயி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் நெய் விளக்கு மற்றும் பிரசாத விற்பனை உள்ளிட்டவைகளின் மூலம் கோயிலுக்கு வருமானம் வருகிறது. இதில் பிரசாத ஸ்டால், முடி காணிக்கை...
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.60 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்களும் இருந்தன
திருப்பரங்குன்றம், ஜூலை 22: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணிகள் மாதந்தோறும் நடைபெறும். இதன்படி கடந்த மாதம் பகதர்கள் வழங்கிய காணிக்கை கணக்கிடும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, துணை ஆணையர் சூரிய நாரயணன், உதவி ஆணையர் வளர்மதி ஆகியோர்...