திருநங்கையை தாக்கிய இருவர் கைது

பேரையூர், நவ. 19: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள தேவன்குறிச்சி சேர்ந்தவர் வீரலட்சுமி (24). இவர் திருநங்கை. இந்நிலையில் வீரலட்சுமியின் தம்பி வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த அழகர் (எ) புலுக்கர் (22) என்பவரின் டூவீலரை இரவல் வாங்கி ஓட்டிச் சென்றபோது, தவறி விழுந்து விபத்தானதில் டூவீலர் சேதமாகியுள்ளது. இதற்கான பணத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில்...

அரசு பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு

By Ranjith
18 Nov 2025

மதுரை, நவ. 19: மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களின் கல்வித்தரம், உணவின் தரம் குறித்தும், பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கம், உட்கட்டமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி...

ஆயுதங்களுடன் மக்களை மிரட்டிய அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்கள் கைது

By Neethimaan
17 Nov 2025

  மதுரை, நவ. 18: மதுரையில், சாலையில் செல்லும் பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், வாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, தெற்குவாசல் போலீஸ் எஸ்ஐ கோடீஸ்வர மருது தலைமையில் ஏட்டுகள் நாகேந்திரன், இளையராஜா ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர்புரம், முனிச்சாலை...

கார்த்திகை சோமவாரத்தையொட்டி கோயில்களில் 108 சங்காபிஷேகம்

By Neethimaan
17 Nov 2025

  திருமங்கலம் / மேலூர், நவ. 18: கார்த்திகை சோமவாரத்தினையொட்டி திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் கார்திகை மாதம் பிரதோஷ சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல்...

எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து

By Neethimaan
17 Nov 2025

  மதுரை, நவ. 18: மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் சார்பில், ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு எஸ்ஆர்எம்யூ மதுரை கோட்ட ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். இதில் மதுரை கோட்ட உதவி செயலாளர் ராம்குமார்,...

அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

By Ranjith
14 Nov 2025

மதுரை, நவ. 15: நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14 குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில்...

மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ்

By Ranjith
14 Nov 2025

மதுரை, நவ. 15: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம் 4.0 கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சீனியர் பிரிவு நிதி மேலாளர் கே.பாலாஜி, சீனியர் பிரிவு பணியாளர் அதிகாரி டி.சங்கரன். ரயில்வே ஓய்வூதியதாரர்கள் உதவி கோட்ட நிதி மேலாளர் எஸ்.கோபிநாத் கலந்து கொண்டனர்....

உசிலம்பட்டி அருகே புதிய ரேசன் கடை திறப்பு: எம்எல்ஏ ஐயப்பன் பங்கேற்பு

By Ranjith
14 Nov 2025

உசிலம்பட்டி, நவ. 15: உசிலம்படுடி அருகே பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை, அய்யப்பன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உசிலம்பட்டி அருகே புதிய ரேசன் கடையை, எம்எல்ஏ அய்யப்பன் நேற்று திறந்து வைத்தார். உசிலம்பட்டி அருகே லிங்கநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு...

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் மறியல் போராட்டம்

By Ranjith
12 Nov 2025

மதுரை, நவ. 13: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் சிபிஎஸ் இறுதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில்...

மாணவிக்கு பாலியல் தொல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஆசிரியரை கைது செய்யக் கோரிக்கை

By Ranjith
12 Nov 2025

மதுரை, நவ. 13: மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர், உடந்தையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜீவா நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குற்றம்...