சூதாடிய 2 பேர் கைது
ஊத்தங்கரை, ஜூலை 9: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்எஸ்ஐ கிருஷ்ணன் மற்றும் போலீசார் இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் பின்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த சாகின்ஷா(33) மற்றும் பூபாலன்(42) ஆகியோரை மடக்கி பிடித்து கைது...
ரங்கனூர் பள்ளி மாணவர்கள் முதலிடம்
போச்சம்பள்ளி, ஜூலை 9: சரக அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்த ரங்கனூர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், போச்சம்பள்ளி அருகே ரங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் 12...
ராயக்கோட்டையில் பெல்ட் அவரைக்காய் சாகுபடி மும்முரம்
ராயக்கோட்டை, ஜூலை 8: ராயக்கோட்டை பகுதியில், குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் தரும் பெல்ட் அவரைக்காயை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் அதிக அளவில் பெல்ட் அவரைக்காயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதை சாகுபடி செய்ய பந்தல் அமைக்க தேவையில்லை. சொட்டு நீர் பாசனம் மட்டும் போதும். விதை...
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுலக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மாதேஷ் (26), தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, இயற்கை உபாதைக்காக அவரது தோட்டத்திற்கு சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒற்றை யானை அவரை தூக்கி வீசியது. இதில் இடுப்பு...
வேப்பனஹள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை
வேப்பனஹள்ளி, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். தற்போதைய பட்டத்தில் மழை பெய்து, நிலக்கடலை விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு பருவமழை தற்போது வரை பெய்யாததால், நிலக்கடலை விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சீசன் தொடக்கத்தில் பெய்த மழையில், தற்போது...
தேர்த்திருவிழா கொடியேற்றம்
கிருஷ்ணகிரி, ஜூலை 7: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிருஷ்ணகிரி நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் திருவிழாக் கொடியை, பெங்களூர்...
ராயக்கோட்டையில் தக்காளி விலை உயர்வு
ராயக்கோட்ைட, ஜூலை 7: ராயக்கோட்டையில், விளைச்சல் குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது. ராயக்கோட்டையில், காய்கறிகள் சாகுபடிக்கு அடுத்து தக்காளி சாகுபடி பிரதானம். இப்பகுதி விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை சாகுபடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக தக்காளி கிரேடு ரூ.200க்கு குறைவாகவே விற்றது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து...
மா விலை வீழ்ச்சியடைந்ததால் 4 லட்சம் மாஞ்செடிகள் தேக்கம்
போச்சம்பள்ளி, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் விலை வீழ்ச்சியால், போச்சம்பள்ளி அடுத்த சந்தூரில் 5 லட்சம் மாஞ்செடிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனை தோட்டக்கலை துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மா உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. அதே போல, மாங்கன்றுகளை உற்பத்தி செய்வதிலும்...
மடத்தில் படித்து வந்த சிறுவன் மாயம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே நாகசந்திரம் கிராமத்தில் ஜங்கமம் மடம் உள்ளது. இங்கு வேத ஆகமம் பயிற்று விக்கப்படுகிறது. மடத்தை சித்தலிங்க சாமியார் (67) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் தாய், தந்தை இல்லாத சரண் (16) என்ற சிறுவன், கடந்த 10 வருடங்களாக தங்கி வேத ஆகமம் படித்து...