ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி

காவேரிப்பட்டணம், நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் 16வது மாநில மாநாட்டிற்கான சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் உதயகுமார், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின்...

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி வகுப்பு

By Karthik Yash
04 Nov 2025

ஊத்தங்கரை, நவ.5: ஊத்தங்கரை(தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட ஆதி திராவிடர்...

ரூ.7.81 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

By Karthik Yash
04 Nov 2025

கிருஷ்ணகிரி, நவ.5: போச்சம்பள்ளியில் இ-நாம் முறையில் ரூ.7.81 லட்சத்திற்கு 4285 கிலோ கொப்பரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 4285 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். கிலோ ஒன்றுக்கு அதிகப்பட்சம் ரூ.216க்கும், குறைந்தபட்சம் ரூ.86.99க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.212க்கும் விற்பனையானது. அதன்படி...

டூவீலரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

By Karthik Yash
31 Oct 2025

கிருஷ்ணகிரி, நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே மரவாரனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா(65), கூலி தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி டூவீலரில் காசிரிகானப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக...

அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்

By Karthik Yash
31 Oct 2025

காவேரிப்பட்டணம், நவ.1: காவேரிப்பட்டணம் அருகே மணிநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். இக்கட்டிடங்கள், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், அமீகா அறக்கட்டளை அமைப்பால், வால்வாயில் புளூயிட் பவர் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் ஆதரவுடன் மார் ₹12...

ரூ.4.9 கோடியில் சாலை அமைக்கும் பணி

By Karthik Yash
31 Oct 2025

ஓசூர், நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி, ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ஓசூர்-மாலூர் சாலை முதல் சிங்கசாதனப்பள்ளி வரை சுமார் ரூ.4.9 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெலத்தூர் முதல் தாளப்பள்ளி வழியாக கர்நாடக எல்லை வரை சுமார் ரூ.55 லட்சத்து...

2வது கணவர் மாயம் இளம்பெண் புகார்

By Karthik Yash
30 Oct 2025

ஊத்தங்கரை, அக்.31: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பெரியதள்ளபாடி அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (25). இவரது மனைவி ஈஸ்வரி (20). கருத்து வேறுபாட்டால் ஈஸ்வரி, தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ஏழுமலையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி, ஈஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு...

சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்

By Karthik Yash
30 Oct 2025

போச்சம்பள்ளி, அக். 31: போச்சம்பள்ளி வட்டம், புலியூரில் இருந்து தனியார் கம்பெனி வழியாக ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகிறது. மேலும் சிப்காட் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த வழியாகதான் செல்ல வேண்டும். இந்நிலையில், புலியூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த...

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

By Karthik Yash
30 Oct 2025

ஊத்தங்கரை, அக்.31: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியைச் சேரந்தவர் காதர்பாஷா. இவரது மகள் நசீபா(20), போச்சம்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், வழக்கம் போல் வேலைக்கு சென்ற நசீபா, பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காதர்பாஷா...

பூக்கள் விற்க சென்ற விவசாயி மாயம்

By Karthik Yash
29 Oct 2025

கிருஷ்ணகிரி, அக். 30: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை முகலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65), விவசாயி. இவர் கடந்த 23ம் தேதி பெங்களூருவுக்கு பூக்களை விற்பனை செய்வதற்காக சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து,...