ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம்

காவேரிப்பட்டணம், ஜூலை 2: காவேரிப்பட்டணத்தில், திமுக சார்பில் நடந்த பயிற்சி பாசறை கூட்டத்தில், மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். காவேரிப்பட்டணத்தில், நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் சாஜித் தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ...

குறைதீர் கூட்டத்தில் 441 மனுக்கள் குவிந்தன

By Karthik Yash
30 Jun 2025

கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 441 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின்சார...

ஓசூர் சிவபத்ரகாளி கோயிலில் ஓம்கார வேள்வி

By Karthik Yash
30 Jun 2025

ஓசூர், ஜூலை 1: மத்திகிரி ராயல் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ பத்ரகாளியம்மன் கோயிலில் மூலவரான சிவபத்ரகாளி அம்மன் பத்மபீடத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் முன்பு சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து, கோ பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் மற்றும் ஓம்கார சிவபத்ரகாளி சிறப்பு வேள்வி நடைபெற்றது. வேத...

6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு சென்றது

By Karthik Yash
30 Jun 2025

கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 6 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தினந்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து திடக்கழிவு மேலாண்மை விதியின் கீழ் தரம் பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் உபயோகமற்ற அல்லது...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று வருகை

By Francis
26 Jun 2025

  ஓசூர், ஜூன் 27: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று(27ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு ஓசூர் மீரா மஹாலில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்திலும், காலை 11...

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

By Francis
26 Jun 2025

  காவேரிப்பட்டணம், ஜூன் 27: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் நாம் பெரிதும் மதிக்கக் கூடிய இடத்தில் இருப்பவர்கள். அவர்கள் நலமுடன் இருந்தால் தான் நாம் நோய் நொடியின்றி நலமுடன்...

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

By Francis
26 Jun 2025

  போச்சம்பள்ளி, ஜூன் 27: மத்தூர் பகுதியில், தாசில்தார் சத்யா தலைமையிலான குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை கண்டதும், வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள், கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, அந்த லாரியில் சோதனையிட்டபோது, 10 யூனிட்...

நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

By Francis
25 Jun 2025

  ஓசூர், ஜூன் 26: ஓசூரில், புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு கொல்லர்பேட்டையில், ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தை மாநகர மேயர் சத்யா, ஆணையாளர் மாரிச்செல்வி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்...

வியாபாரிகளுக்கு கடை வழங்குவதில் மோதல்

By Francis
25 Jun 2025

    தேன்கனிக்கோட்டை, ஜூன் 26: தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கு, கடை வழங்குவதில் இருதரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டதால், டிஎஸ்பி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் எதிரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு, ரூ.1000 என்ற வாடகையில், இரும்பு தகரத்தாலான 20 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று...

கெலவரப்பள்ளிக்கு நீர்வரத்து 701 கனஅடி

By Francis
25 Jun 2025

ஓசூர், ஜூன் 26: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 701 கன அடியாக அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 981 கனஅடி நீர் வந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில்...