தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டிருந்த 2 யானைகள் காட்டிற்குள் விரட்டியடிப்பு: விவசாயிகள் நிம்மதி

தேன்கனிக்கோட்டை, அக்.26: தேன்கனிக்கோட்டை அருகே தடிகல் பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரச்சந்திரம், தாவரக்கரை, அயன் பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி உள்ளிட்ட...

டெம்போ டிரைவர் தற்கொலை

By Karthik Yash
24 Oct 2025

கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கோஜிகொத்தூரை சேர்ந்தவர் பாலாஜி (28). டெம்போ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி, கடந்த 21ம் தேதி விஷத்தை குடித்து வீட்டில் மயங்கினார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்...

பள்ளி அருகே சுற்றித்திரிந்த குட்டி யானை

By Karthik Yash
24 Oct 2025

தேன்கனிக்கோட்டை, அக்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாரசந்திரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று தாயிடம் இருந்து பிரிந்த 4 வயதுக்குட்பட்ட குட்டி யானை சுற்றித்திரிந்தது. குட்டி யானையை பார்த்ததும் பள்ளி மாணவர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, குட்டி யானையை அருகில் உள்ள...

33 வார்டுகளிலும் 27ம் தேதி சிறப்பு கூட்டம்

By Karthik Yash
24 Oct 2025

கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி(திங்கட்கிழமை) சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம்...

ஓசூரில் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

By Karthik Yash
23 Oct 2025

ஓசூர், அக்.24: ஓசூரில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் பகுதியில் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. மாலை நேரங்களில் தினமும் மழை பெய்கிறது. இதனால் சளி, இருமல்,...

மாவட்டத்தில் 101 ஏரிகள் முழுமையாக நிரப்பியது

By Karthik Yash
23 Oct 2025

கிருஷ்ணகிரி, அக்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், 101 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக, தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ேமலும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து...

ஐயப்பன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

By Karthik Yash
23 Oct 2025

காவேரிப்பட்டணம், அக்.24: காவேரிப்பட்டணம் அருகே, நரிமேடு கிராமத்தில் பாலகணபதி, சுப்பிரமணீஸ்வரர், ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று பூஜை செய்து, புனித நீர் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து விக்னேஸ்வர...

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

By Karthik Yash
22 Oct 2025

கிருஷ்ணகிரி, அக். 23: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(54). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு சென்ற பஸ்சில், நேற்று கோவிந்தராஜ் பணியில் இருந்தார். அப்போது, மதுபோதையில் பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினர். அவர்கள் பஸ் நிலையத்திற்கு பஸ் சென்ற பிறகும், இறங்காமல் தூங்கிக்கொண்டிருந்தனர்....

ராகி, முட்டைகோஸ் வயலை சேதப்படுத்திய யானைகள்

By Karthik Yash
22 Oct 2025

தேன்கனிக்கோட்டை, அக். 23: தேன்கனிக்கோட்டை அருகே, முட்டைகோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் 5 யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, கொத்தூர் தாவர கேரட்டி, ஏணிமுச்சந்திரம், ஆலஹள்ளி, காரண்டப்பள்ளி, மலசோனை உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து...

32 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

By Karthik Yash
22 Oct 2025

கிருஷ்ணகிரி, அக். 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு 32 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில், 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்டத்தில் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, ரவுடிகள் பிரிக்கப்பட்டு அவர்கள்...