ஏரியில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலி
கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பி.செட்டிப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சுன்னப்பேட் பகுதியைச் சேரசிவராம்சிங்(24) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி, சொந்த வேலையாக அக்கொண்டப்பள்ளி பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள ஏரியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று...
கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 165 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட...
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேன்கனிக்கோட்டை, நவ.12: தேன்கனிக்கோட்டையில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத்தலைவர் முனிராஜூலு தலைமை தாங்கினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த...
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
தேன்கனிக்கோட்டை, நவ.11: தேன்கனிக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி குடியிருப்புகள், கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டி வருகின்றனர். தாலுகா தலைமையிடமாக உள்ளதால்,...
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சுற்றிவளைப்பு
கிருஷ்ணகிரி, நவ.11: ராயக்கோட்டை அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே அலேசீபம் கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). விவசாயி. இவரது தாய் சாரதா. நேற்று முன்தினம் காலை வீட்டில் சாரதா மட்டும் இருந்துள்ளார். கதவை திறந்து வைத்து விட்டு...
கிருஷ்ணகிரி அணைக்கு 728 கனஅடி நீர்வரத்து
கிருஷ்ணகிரி, நவ.11: கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து 2வது நாளாக 728 கனஅடியாக நீடித்தது.தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணை நீர்திறப்பை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 728 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது...
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயம்
தர்மபுரி, நவ. 7: தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு, நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு...
அரூரில் தக்காளி விலை உயர்வு
அரூர், நவ.7: தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து...
செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக ஜீப் ஏலம்
தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண் TN09 BG 2345) பொலிரோ எல் எக்ஸ் என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை ரூ.75 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்ய...