யாரும் வாக்குரிமையை இழக்கப் போவதில்லை
ஓசூர், நவ.19: ஓசூரில் பாஜ மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். மக்களும் அதனை பூர்த்தி செய்து திரும்பி அளித்து வருகின்றனர். இறந்தவர்களின்...
மதுபானங்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது
ஊத்தங்கரை, நவ.18: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி, பொம்மனாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை எஸ்ஐ மாதையன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அருணாச்சலம்(46) மற்றும் சத்தியமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 10 மதுபாட்டில் என...
எருது விடும் விழா நடத்திய 11 பேர் மீது வழக்கு பதிவு
கிருஷ்ணகிரி, நவ.18: கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், வேப்பனஹள்ளி அருகே...
குட்கா பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, நவ.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் மத்திகிரி, கந்திகுப்பம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்றதாக அன்வர் பாஷா, வெங்கடேசன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து...
2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேன்கனிக்கோட்டை, நவ.15: தேன்கனிக்கோட்டையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது. நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி குடியிருப்புகள், கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டி வருகின்றனர். தாலுகா தலைமையிடமாக உள்ளதால் சுற்றியுள்ள...
1,096 வாக்குச்சாவடிகளில் உதவி மையங்கள் செயல்படும்
கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும்(15ம் தேதி), நாளையும்(16ம் தேதி) 1,096 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த உதவி மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
14,514 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11ம் வகுப்பு பயிலும் 14,514 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு...
வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயன்ற கும்பலுக்கு வலை
கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(30). தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (35)...
கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
கிருஷ்ணகிரி, நவ.13: சூளகிரி அடுத்த குண்டுக்குறுக்கி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர், மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது உறவினர்கள் மற்றும் தோழிகளின்...