மல்லிகைப்பூக்கள் விலை அதிகரிப்பு
காவேரிப்பட்டணம், நவ.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், டேம்ரோடு, அவதானப்பட்டி, மலையாண்டஹள்ளி, போத்தாபுரம், ஜெகதாப், பெண்ணேஸ்வர மடம், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 6 ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பூக்களை கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ள நிலையில்,...
ஆட்கள் பற்றாக்குறையால் ராகி அறுவடை பாதிப்பு
தேன்கனிக்கோட்டை, நவ.25: தேன்கனிக்கோட்டையில் ராகி அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பிரதான பயிராக ராகி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் ஊடுபயிராக சோளம், கடுகு, அவரை, துவரை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆடி பட்டத்தில் விதைத்த ராகி, தொடர்ந்து பெய்த மழையால்...
பாரூர் ஏரி பகுதியில் சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
போச்சம்பள்ளி, நவ.22: போச்சம்பள்ளி தாலுகா, பாரூரில் உள்ள பெரிய ஏரியால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாரூரில் இருந்து கீழ்குப்பம் வழியாக போச்சம்பள்ளி, தர்மபுரி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பாரூர் பெரிய ஏரி அடிவாரத்தில் விவசாய நிலத்தினை ஒட்டியவாறு மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின்கம்பம்...
தெரு விளக்கு எரியாததால் கிராம மக்கள் அவதி
போச்சம்பள்ளி, நவ.22: போச்சம்பள்ளி அருகே மேட்டுபுலியூர் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களின் வசதிக்காக, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வந்தனர்....
நுழைவுவாயில், சமையலறை கட்டிடம் திறப்புவிழா
கிருஷ்ணகிரி, நவ.22: அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி 60 ஆண்டு விழாவில் பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் சமையலறை கட்டிடத்தை மதியழகன் எம்எல்ஏ., திறந்து வைத்தார். பர்கூர் ஒன்றியம் அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நுழைவு வாயில் திறப்பு விழா மற்றும் ரூ.9 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய...
கருங்கற்கள் கடத்திய மினிலாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பாரதி மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரி -ராயக்கோட்டை சாலையில் மாதேப்பட்டி என்னுமிடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற மினி லாரியில் சோதனை செய்தனர். அதில், கருங்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.3 ஆயிரம் மதிப்பிலான அந்த கற்களை கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு கடத்தி வந்திருப்பது...
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
தேன்கனிக்கோட்டை, நவ.21: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா மகன் சென்னபசப்பா(36), எலக்ட்ரீசியன். இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், நாகமல்லிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சென்னபசப்பாவின் நண்பர்களில் சிலர் சபரிமலைக்கு செல்ல மாலை போட்டுள்ளனர். நேற்று மதியம், ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து சீரியல் செட்...
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் மேயர் ஆய்வு
ஓசூர், நவ.21: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநாயக்கன் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை மேயர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, பொது கழிப்பிடங்களை பராமரித்தல், விளையாட்டு உபகரணங்கள்...
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி, நவ.19: கிருஷ்ணகிரி நகராட்சி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு...