கருங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ.29: விழுப்புரம் கனிம வளத்துறை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான பறக்கும் படையினர், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைச்சந்து என்ற இடத்தில் கேட்பாரற்று நின்ற மினி டிப்பர் லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை பகுதிக்கு ரூ.3000 மதிப்பிலான 3 யூனிட் கருங்கற்களை கடத்தி...

தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

By Karthik Yash
27 Nov 2025

கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகோல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (50). கூலித்தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை லண்டன்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே, டூவீலரில் சென்ற போது, சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர் ஹாரன் அடித்தும், அந்த வாலிபர்கள் விலகி நிற்கவில்லை....

எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்

By Karthik Yash
27 Nov 2025

கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரியில் இன்று (28ம் தேதி) எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படும் எரியாயு நுகர்வேர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுனான...

ஓசூர் ராமலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

By Karthik Yash
27 Nov 2025

ஓசூர், நவ.28: ஓசூர் வசந்த் நகரில் பிரசித்தி பெற்ற பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை ராமலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகளோடு துவங்கிய நிகழ்ச்சியில், புனிதநீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது....

மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு

By Karthik Yash
26 Nov 2025

போச்சம்பள்ளி, நவ.27: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி மன்றத்தின் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்று கொண்டார். பதவியேற்பு விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை முன்னிலை வகித்தார்....

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல்

By Karthik Yash
26 Nov 2025

கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடந்தது. கூட்டுறவுத்துறை சார்பில், தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2,581 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி தேர்வு நடந்தது. இதை 56,800 பேர் எழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை மத்திய கூட்டுறவு...

சந்திரசூடேஸ்வரர் கோயிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

By Karthik Yash
26 Nov 2025

ஓசூர், நவ.27: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் உண்டியலில் ரூ.24 லட்சம் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு முன்னிலையில், கோயிலில் உள்ள 8 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள்,...

பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

By Karthik Yash
26 Nov 2025

ஓசூர், நவ.26: ஓசூர் சின்ன எலசகிரியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 16ம்தேதி அவர் அத்திப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது இவரது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திருடு போனது. இதுகுறித்து சிவசங்கர் சிப்காட் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார்...

தேன்கனிக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய 2 விவசாயிகள் கைது

By Karthik Yash
26 Nov 2025

தேன்கனிக்கோட்டை, நவ.26: தேன்கனிக்கோட்டை அருகே உரிமம் இல்லாமல், வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 விவசாயிகளை கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் ஒசஹள்ளி கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஷ், (47) என்பவரது வீட்டிற்கு பின்னால்...

சூளகிரி அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

By Karthik Yash
26 Nov 2025

ஓசூர், நவ.26: சூளகிரி அருகே கோயிலில் நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி அருகே உள்ள பீமண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(70). இவர் அந்த பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த 22ம்தேதி இரவு அவர் பூஜைகளை முடித்து, கோயிலை பூட்டி...