கால்வாய் சீரமைப்பு பணிக்கு பூமி பூஜை
ஓசூர், டிச.3: கெலவரப்பள்ளி அணையின் கால்வாய்கள் சீரமைக்கும் பணியை, பிரகாஷ் எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். ஓசூர் ஊராட்சி ஒன்றியம், கெலவரப்பள்ளி அணை கால்வாய்களின் பழுதடைந்த பகுதிகள் நீர்வளத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயின் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள், ரூ.9.70 கோடி மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை...
சாமந்திப்பூ விலை அதிகரிப்பு
ராயக்கோட்டை, டிச.2: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ராயக்கோட்டை மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை அதிகரித்துள்ளது. ராயக்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை சாகுபடி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி நல்ல விலையும் கிடைத்து வருகிறது. விழாக்கள், பண்டிகைகள், திருமண நாட்களில் சாமந்திப்பூ கிலோ ரூ.150 வரை விற்பனையாகும். சாதாரண நாட்களில் கிலோ ரூ.50க்கு குறையாமல் விற்பதால்...
ஊத்தங்கரை அருகே நகை, பணத்துடன் இளம்பெண் திடீர் மாயம்
ஊத்தங்கரை, டிச.2: ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே வீரனகுப்பத்தை சேர்ந்தவர் ராணி. இவரது மகள் சாருமதி (24). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் வீட்டில் இருந்த சாருமதி திடீரென மாயமானார். வீட்டில் இருந்த அரை பவுன் நகை மற்றும் 3000 பணத்துடன்...
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
வேப்பனஹள்ளி, டிச.2: வேப்பனஹள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் அமரேந்திரன்(25). இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே பள்ளியில் படித்து வந்த மாணவி காளியம்மாள் என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக...
பலத்த காற்று, மழையால் ராகி அறுவடை பாதிப்பு
தேன்கனிக்கோட்டை, டிச.1: தேன்கனிக்கோட்டையில் பலத்த காற்று, மழையால் ராகி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்காக வந்த இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் பகுதியில் கடந்த 15 நாட்களாக ராகி அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் யானைகள் தொந்தரவால், அறுவடை பணிகளை விரைந்து...
பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2,000 பேர் திமுகவில் இணைவு
ஓசூர், டிச.1: ஓசூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். ஓசூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவரான புருஷோத்தமரெட்டி, அச்செட்டிப்பள்ளி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசரெட்டி, அதிமுக ஒன்றிய துணை செயலாளர் நவீன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, அமைச்சர் சக்கரபாணி,...
மாவட்டம் முழுவதும் வாட்டி வதைக்கும் குளிர்
கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை நீண்ட நேரம் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், காலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த 3...
கோயில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை
தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டையில் கோயில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில், 5க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து, அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2...
பஸ் ஸ்டாண்டில் பொது மக்களை ஆபாசமாக திட்டியவர் கைது
தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், எஸ்ஐ நாகராஜன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் குடிபோதையில் நின்றிருந்த ஒருவர், அங்கு நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்களை ஆபாசமாக திட்டி இடையூறு செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்த எஸ்ஐ, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்...