வரும் 5 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை

கரூர், செப். 3: நபிகள் நாயகம் பிறந்த தினத்தில் டாஸ்மாக் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் 5.9.2025ம் தேதி, நபிகள் நாயகம் பிறந்த தினம்’ என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மற்றும்...

குப்பைக்கழிவுகளால் கடும் துர்நாற்றம்

By Suresh
02 Sep 2025

கரூர், செப். 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதிச் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி சாலையில் இருந்து மதுரை சாலைக்கு செல்லும் சாலை சின்னாண்டாங்கோயில் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன.இந்நிலையில், இந்த சாலையோரம் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள்...

கரூர் பகுதியில் பெட்டி, டீ கடைகளில் குட்கா விற்ற 6 பேர் கைது

By Suresh
01 Sep 2025

கரூர், செப். 2: பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யததாக 6 பேர் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். சிந்தாமணிப்பட்டி, தாந்தோணிமலை, பாலவிடுதி, மாயனூர், அரவக்குறிச்சி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக முருகானந்தம், கல்யாணசுந்தரம், சிவக்குமார், ஆறுமுகம், ராஜ்குமார், ஜெய்லானி...

கரூர் அருகே1040 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

By Suresh
01 Sep 2025

கரூர், செப்.2: கருர் வெங்கமேடு அருகே பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டதோடு, இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாங்கப்பாளையம் ஒட்டபிள்ளையார் கோவிலுக்கு...

குப்பைகள் ஓடும் ஆறாகி போன மக்கள் பாதை வாய்க்கால்

By Ranjith
29 Aug 2025

கரூர், ஆக. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை வழியாக செல்லும் வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை வழியாக வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகளை ஒட்டி இந்த வாய்க்கால் செல்கிறது. இதன் காரணமாக போதிய பராமரிப்பின்றி வாய்க்கால் புதர்கள் மண்டி மிகவும் மோசமான நிலையில்...

வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகளை கொட்ட கூடாது

By Ranjith
29 Aug 2025

கரூர், ஆக, 30: கரூர் வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும், சாலையோரம் அதிகளவு...

பெட்டி, டீக்கடைகளில்200 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு பதிவு

By Ranjith
29 Aug 2025

கரூர், ஆக. 30: கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில...

வேலாயுதம்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை

By Ranjith
28 Aug 2025

வேலாயுதம்பாளையம், ஆக. 29: கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 30-ந்தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை,...

புகழூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

By Ranjith
28 Aug 2025

கரூர், ஆக. 29: புகழூர் நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழூர் நகராட்சியில், வார்டு எண்.5, 14, 15-க்கு ஆர்.எஸ்.ரோடு காந்தியார் மண்டபத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், நாகம்பள்ளி ஊராட்சிக்கு மலைக்கோவிலுார் ஈஸ்வரன் கோயில் மண்டபத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும்,...

கிருஷ்ணராயபுரத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு

By Ranjith
28 Aug 2025

கிருஷ்ணராயபுரம், ஆக. 29: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் கோட்டப்பொறியாளர் ரவிக்குமார்,கிருஷ்ணராயபுரம் உதவிக்கோட்டப் பொறியாளர். கர்ணன் ஆலோசனைப்படி, மழைக்காலங்களில் சாலை ஓரங்களில், மண் அரிமானத்தை தவிர்க்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் அசாருதீன் தலைமையில் நேற்று திருக்காம்புலியூர் ஊராட்சி,...