கோயிலுக்கு சென்ற முதியவர் சாலை விபத்தில் பலி
அரவக்குறிச்சி, செப்.11: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (70). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடியை அடுத்த வடகம்பாடி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு, அரவக்குறிச்சி அருகே உள்ள குமரண்டான்வலசு பகுதியில் உள்ள தனது மகன் ரங்கன் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று...
அய்யர்மலை அரசுப் பள்ளியில் 56 மாணவ, மாணவிகளுக்கு கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சி
குளித்தலை, செப்.11: அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் உள்பட 56 பேருக்கு கல்விசீர் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்து, பெற்றோர்களை இழந்த...
கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் செப். 10: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம்இ மாவட்ட தலைவர் ராஜாமுகமதுஇ மாவட்ட...
தரகம்பட்டி அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது
கடவூர், செப், 10: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிபட்டி காவல்சரகம் மேலப்பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). இவர் தென்னிலை ஊராட்சி மாமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளனர். தகவலறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதியில் விரைந்து சென்றனர். முருகன் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையம் கொண்டுவந்து...
கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், செப். 10: கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறதுஇதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.43,45-க்கு தாந்தோணிமலை கே..சி.எம்.மஹாலிலும், குளித்தலை நகராட்சியில் வார்டு எண்.9, 14, குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், நங்கவரம் பேரூராட்சியில், வார்டு எண்.10,11,12,13,14,15,16,17,18-ற்க்கு நங்கவரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில்,...
குளித்தலையில் இறந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் சேமநலநிதி வழங்கல்
குளித்தலை, செப். 9: குளித்தலையில் மறைந்த வக்கீல் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் சேமநலநிதி வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றிவந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி மற்றும் வக்கீல் குமரவேல் இயற்கையை எய்தினர். அவர்கள் குடும்பத்தினருக்கு வக்கீல் சேமநல நிதியிலிருந்து தலா ரூ 10 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ் ச்சி நீதிமன்ற...
கரூர் வாங்கல் சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்
கரூர், செப். 9: கரூர் வாங்கல் சாலை அரசு காலனி அருகே சாலையோரம் குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு முன்னதாக அரசு காலனி பகுதியை தாண்டியதும் இந்த பகுதியில் சேகரிக்கப்படும்...
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், செப். 9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்-கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். இதில, அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். எந்த பணி வரன்...
தென்னை மரங்களில் போரான் சத்து குறைபாடு
கரூர், செப். 3: தென்னை மரங்களில் போரான் சத்தின் குறைபாடு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: போரான் சத்தின் அறிகுறிகளை பொறுத்தவரை, தென்னையில் ஒலைகளில் சிற்றிலைகளின் நுணிகள் வளைந்து இருக்கும். குரும்பை உதிர்வும் ஏற்படும். காய்கள் வெடிக்கும். பருப்பு உற்பத்தி குறைந்து காணப்படும். இதனை கட்டுப்படுத்த, மண் ஆய்வு மேற்கொண்டு...