கரூர் மாவட்டம் 156 ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
கரூர் ஜூலை 20: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அவர்களது இல்லங்களுக்கு சென்று அளிக்கும் வகையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை...
கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் சாலை மறியல்
கரூர், ஜூலை 19: கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அமைப்பின் நிர்வாகிகள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில்...
இழப்பை தவிர்க்க கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கரூர், ஜூலை. 19: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுவதாக கலெக்டர்தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கருர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து ஜூலை 2ம்தேதி முதல் 22ம்தேதி வரை 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு...
குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், ஜூலை. 19: குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் கரூர் மாவட்டத்தில் ஜூலை...
வாங்கல் அருகே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டவர் தற்கொலை
கரூர், ஜூலை. 18: கருர் மாவட்டம் வாங்கல் அருகே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கருர் மாவட்டம் வாங்கல் அடுத்த என்புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (56). இவர், கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கல் பிரச்னை காரணமாக ஏற்பட்ட வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால்,...
தடுப்புச்சுவர் இல்லாத வாய்க்கால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்
கரூர், ஜூலை 18: கரூர் திருமா நிலையூர் பகுதியிலிருந்து அமராவதி ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் குடியிருப்புகளை ஒட்டி அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பாதையில் வாய்க்கால் செல்கிறது. இதன் காரணமாக வாய்க்கால் மேற்புறம் சிறிய...
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு
கரூர், ஜூலை 18: கரூர் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின்...
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
கரூர், ஜூலை 17: கரூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1...
கரூர் மாநகரில் மேம்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிற்கும் கனரக வாகனங்களால் இடையூறு
கரூர், ஜூலை 17: வெங்கமேடு சர்வீஸ் சாலையோரம் நீண்ட நேரம் வாகன நிறுத்தம் செய்யப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரைச் சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதில், திருக்காம்புலியூர் மற்றும் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில்...