கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
கடவூர், நவ, 15: கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு வருவதால் கடவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் வட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள சாலையில் கடவூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வந்ததால்...
கடவூர் அருகே முள்ளிப்பாடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
கடவூர், நவ, 13: கடவூர் அருகே முள்ளிப்பாடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் வடக்கு தெரு மணி மகன் ராசு (52). இவர் அதே பகுதியில் உள்ள பொது டி.வி அறை பின்புறம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார். இதுகுறித்து...
கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி
கிருஷ்ணராயபுரம், நவ.13: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் 136 கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்...
அரவக்குறிச்சி ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல்
கரூர், நவ. 13: அரவக்குறிச்சி ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாகஆர்டிஓ தகவல். கரூர் மாவட்ட அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடத்துதல் அறிவிப்பு எண். அ1/3516/2023...
கரூர் மாவட்டத்தில் பதிவறை எழுத்தர் பணிக்கு நேர்காணல்
கரூர், நவ. 12: க.பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர் பணியிடம் நிரப்புவதற்கு அழைப்பாணை பெற்றவர்கள் ஒன்றிய ஆணையர் நவம்பர் 12ம்தேதி காலை 10 மணிக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.க.பரமத்தி ஒன்றியம், ஒன்றிய...
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் காந்தி சிலையை சுற்றிலும் தடுப்புவேலி அமைக்க வேண்டும்
கரூர், நவ. 12: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலையை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் காந்தி சிலை உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலையை மையப்படுத்தி...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: ரயில் ,பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை
கரூர், நவ. 12: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியில் நேற்று முன்தினம் மாலை கார்வெடித்தது. அதில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, போலீசார்களும்...
கரூர் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர், நவ. 11: கரூர் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்டும் குப்பைகளால் ஏற்பட்டுள்ள என சுகாதார சீர்கேடை தடக்க அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கருர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் பின்புற பகுதியின் சில பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை மையமாக வைத்து இந்த பகுதிகளில்...
கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
கிருஷ்ணராயபுரம்;நவ.11: கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுப்பட்டி அரசு பள்ளி திருக்குறள் ஒப்புதல் போட்டி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புதல் நிகழ்ச்சியில் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தனர்.கரூரில் வீ.த. லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை...