நெகிழி கழிவு சேகரிப்பு முகாம்

கரூர், அக். 25: நெகிழி கழிவுகள் இன்று சேகரிக்கப்படுவதாக கஎல்க்டர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் (பிளாஸ்டிக்) நெகிழியை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதன் பொருட்டு அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும்...

தோகைமலை அருகே மதுபானங்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

By Ranjith
23 Oct 2025

தோகைமலை, அக். 24: மதுபானம் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணிக்கம்மாள் (50). இவர். கொசூர் கொத்தமல்லிமேடு அருகில் உள்ள தனது வீட்டின் அருகே மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். இதேபோல் கழுகூர் ஊராட்சி அக்காண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(எ)சின்னத்தம்பி...

அக்டோபர் 27ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By Ranjith
23 Oct 2025

கரூர், அக். 24: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்டோபர் 27ம்தேதி நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள்...

கரூர் பகுதியில் மயில்கள் மர்மசாவு

By Ranjith
23 Oct 2025

கரூர், அக். 24: இறந்த மயில்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்திச் செல்ல தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் ஒருங்கிணைந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களின் பின்புறம் நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகிறது. அவ்வாறு சுற்றித்திரியும் பல்வேறு காரணங்களால் இறக்கும்...

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு செந்தில் பாலாஜி நன்றி

By MuthuKumar
23 Oct 2025

கரூர், அக். 23: அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ, 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்று ரூ. 3000 கோடிக்கு...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; கரூர் மாவட்டத்தில் இதுவரை 505.30 மி.மீ. மழை பொழிவு

By MuthuKumar
23 Oct 2025

கரூர், அக். 23: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் கரூரின் சீதோஷ்ணநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ. பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மி.மீட்டரும்,...

பராமரிப்பு இல்லாத மழை நீர் வடிகால் தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்களாக ஓட்டல்கள் மூடல்

By MuthuKumar
23 Oct 2025

க.பரமத்தி, அக்.23: தீபாவளி பண்டிகைக்கு சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர்வாசிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் பெரிய மற்றும் சிறிய அளவிலான டீக்கடை, பேக்கரி, டிபன் கடைகள், ஓட்டல், மெஸ் மற்றும் பெரிய அளவிலான ஓட்டல்கள் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. வெளி மாநிலம்...

அரவக்குறிச்சியில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Ranjith
18 Oct 2025

அரவக்குறிச்சி, அக். 18: அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு, அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மற்றும் பள்ளப்பட்டி பேருந்து நிலையங்களில் பல்வேறு இடங்களில் ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில்...

கடவூர் அருகே ஆடுகள் மாயம்: விவசாயி புகார்

By Ranjith
18 Oct 2025

கடவூர், அக். 18: கரூர் மாவட்டம் கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி கூனமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் விவசாயி. ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். நாகராஜ், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை, வீட்டின் அருகே வழக்கமாக கட்டிவைத்துவிட்டு தூங்கியுள்ளார். கட்டி உள்ளார். பின்னர் நானராஜ் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் மைதானத்தில் ‘கார் பார்க்கிங்’

By Ranjith
18 Oct 2025

கரூர், அக். 18: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் மைதானத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 17ம்தேதி முதல் 19ம்தேதி வரை கரூர் ஜவஹர் பஜார், ஈஸ்வரன் கோயில் சந்து, லாரி மேடு போன்ற பல்வேறு பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகள் கடைவைத்து வியாபாரம்...