ஜூலை 24ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரிக்கு உள்ளூர் விடுமுறை

  நாகர்கோவில், ஜூலை 17: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24ம் தேதி (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 24ம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு...

நித்திரவிளை அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தொழிலாளி பலி

By Ranjith
16 Jul 2025

  நித்திரவிளை, ஜூலை 17: கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். கடந்த 14ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் தடம் எண் 81சி என்ற அரசு பேருந்தை லிவிங்ஸ்டன் கருங்கல் பகுதியில் இருந்து நித்திரவிளை நோக்கி ஓட்டி வந்துள்ளார். காஞ்சாம்புறம் பகுதியில் வந்த போது...

கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் தையல் தொழிலாளர்களுக்கு அனைத்து மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல் பணபலன்களையும் வழங்க வேண்டும்

By Ranjith
15 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 16: கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் 11வது மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணை செயாளர் ஷோபா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு பொருளாளர் இந்திரா வரவேற்றார். சம்மேளன மாநில பொதுச்செயலாளர்...

சிறப்பாசிரியர் நியமனம் அரசாணைக்கு முரணாக நியமனங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

By Ranjith
15 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 16: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறையில் சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு நடைமுறையில் இருந்த தடையை நீக்கி 250 மாணவிகளுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் உள்ள தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியும், இந்த அனுமதி மற்ற...

நித்திரவிளை அருகே பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்

By Ranjith
15 Jul 2025

  நித்திரவிளை, ஜூலை 16: நித்திரவிளை அருகே பைக்- பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன்(50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தடம் எண் 81சி என்ற அரசு பேருந்தை கருங்கல் பகுதியில் இருந்து நித்திரவிளை நோக்கி...

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மாற்றுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By Arun Kumar
14 Jul 2025

  கன்னியாகுமரி, ஜூலை 15: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நினைவு தோரண வாயில் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியால் காந்தி மண்டபம் மற்றும் கடற்கரை நோக்கி செல்லும் முக்கிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக...

ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை

By Arun Kumar
14 Jul 2025

  அருமனை, ஜூலை 15: ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெள்ளருக்குமலையில் உள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் (55) என்பவர் சாராயம் காய்ச்சுவதாக எஸ்.பி. ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது...

நாகர்கோவிலில் ஒன்றே கால் கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது: செல்போன்கள் ஆய்வு

By Arun Kumar
14 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 15: நாகர்கோவிலில் ஒன்றே கால் கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் கோட்டார் எஸ்.ஐ. முகுந்த், தலைமையிலான போலீசார் கோட்டார் பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ஒழுகினசேரி ஆறாட்டு ரோடு ரயில்வே டிராக் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வாலிபர்கள் சிலர் நிற்பதாக தகவல் வந்தது....

சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரி பொறுப்பேற்பு

By Karthik Yash
10 Jul 2025

நாகர்கோவில், ஜூலை 11: சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் பொறுப்பேற்றார். கன்னியாகுமரி சிஎஸ்ஐ ஆயராக பணியாற்றி வந்த ஏ.ஆர்.செல்லையா பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி சிஎஸ்ஐ மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக சிஎஸ்ஐ மலபார் ஆயர் டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நியமிக்கப்பட்டார். அவர்...

கல்வி நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் மனித பாதுகாப்பு கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
10 Jul 2025

நாகர்கோவில், ஜூலை 11: கல்வி மனித அடிப்படை உரிமை. ஆனால் சில ெபாறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ரசீது இல்லாமல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கின்றனர். விடுதி கட்டணமும் அதிகம். இது மனித அடிப்படை உரிமை மீறலாகும். எனவே அரசு இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது...