திருவனந்தபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய குறை தீர் முகாம்
திருவனந்தபுரம், அக். 16: முன்னாள் ராணுவ வீரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிவிலியன் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம், புதிய ஸ்பார்ஷ் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படும் பயன்கள் மற்றும் குறைகள் தொடர்பான முகாம், இன்று (16ம் தேதி) திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ முகாமில் உள்ள கரியப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது. கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத்...
திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியர் கைது
திருவனந்தபுரம், அக். 16: திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ஆதில் (27). தஃப்முட்டு ஆசிரியராக உள்ளார். தஃப்முட்டு கலை, பெரும்பாலும் பள்ளி கலைநிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முகம்மது ஆதில் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு இதை பயிற்றுவித்து வருகிறார். இந்தநிலையில்...
கன்னியாகுமரியில் பைக் ஓட்டிய சிறுவர்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி, அக். 14: கன்னியாகுமரி போலீஸ் எஸ்.ஐ. வினிஸ்பாபு மற்றும் போலீசார் சர்ச் ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக் ஓட்டி வந்த சிறுவனை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில் சிறுவன் 18 வயது நிரம்பாமல் பைக் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து 17 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது...
குமரி தீயணைப்பு துறையில் 2 சிறப்பு நிலை அலுவலர்களுக்கு பதவி உயர்வு
நாகர்கோவில், அக். 14: தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு துறையில் சிறப்பு நிலைய அலுவலர்களாக இருந்தவர்களை நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு கொடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் காலி இடங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி...
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
நாகர்கோவில், அக். 14: கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சங்க நிர்வாகிகள், குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது, பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972ன் படி பணிக்கொடை வழங்காமல் மறுக்கப்படுகிறது. பணிக்கொடை நிதியில் எந்தவிதமான பிடித்தமோ, ஈடுசெய்யவோ வழங்க...
நித்திரவிளை அருகே வாகனம் மோதி சேதமடைந்த உயர் அழுத்த மின்கம்பம் மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நித்திரவிளை, அக். 13: நித்திரவிளை அருகே பணமுகத்திலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில், முரப்பு என்னுமிடத்தில் நிற்கும் உயர் அழுத்த மின்கம்பத்தில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அப்பகுதி வழியாக சென்ற கடத்தல் வாகனம் ஒன்று மோதியது. அப்போது மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள், நம்பாளி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்....
களியக்காவிளை அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் கொத்தனார் மீது வழக்கு
மார்த்தாண்டம், அக். 13: களியக்காவிளை அருகே குளப்புரம் அடுத்த வடலிக்காவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (60). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனாரான பேலார் போஸ் (44) என்பவருக்கும் இடையே, காம்பவுண்ட் சுவரை இடித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பேலார் போஸ், கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால்...
மண்டைக்காடு அருகே பைக் மோதி மீனவர் காயம்
குளச்சல், அக். 13: மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (65). மீனவர். இவர் சம்பவத்தன்று குளச்சல்- மணவாளக்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக், திடீரென தாசன் மீது மோதியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் மண்டைக்காடு...
மார்த்தாண்டத்தில் வீடு புகுந்து துணிகர திருட்டு
மார்த்தாண்டம் அக். 12: மார்த்தாண்டம் மதிலகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் மனைவியுடன் தரை தளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தின் மாடிப்படிகள் வெளிப்புறமாக உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு இரண்டு திருடர்கள் மாடி முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 2...