நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண் யோகா பயிற்றுநருக்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகர்கோவில், நவ.19: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கு பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் அல்லது டிப்ளமோ யோகா மற்றும் இயற்கை அறிவியல் படித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதம்...
களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறப்பு
திருவட்டார், நவ.19: சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக குமரி மாவட்ட அறநிலையத் துறை சார்பில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர்...
அருணாச்சலா பள்ளியில் குழந்தைகள் தின விழா
நாகர்கோவில், நவ.18: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அருணாச்சலா பள்ளியின் துணை தாளாளர் சுனி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். பள்ளி முதல்வர் லிஜோமோள் ஜேக்கப் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ரோஷன் ஆ சேம் குழந்தைகள் தின உரையாற்றினார். போட்டியில் கலந்து...
பொய்கை அணையில் இன்று தண்ணீர் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு
நாகர்கோவில், நவ. 18: தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையில் இருந்து, தோவாளை தாலுகா மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பாசன நிலங்களுக்கு, இன்று (18ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை 16 நாட்களுக்கு, வினாடிக்கு 30 கன அடி வீதம்...
72-வது கூட்டுறவு வாரவிழா
நாகர்கோவில், நவ.18: 72-வது கூட்டுறவு வாரவிழா 3-ஆம் நாள் நிகழ்ச்சியையொட்டி கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை பிரிவு திறந்து வைக்கப்பட்டு விற்பனை மேளா நடைபெற்றது. பண்டகசாலை செயலாட்சியர் பேபி ரமேஷ் தலைமை வகித்தார். பிரியா வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர், கள அலுவலர் அனிஷ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். கூட்டுறவு சார் பதிவாளர்,மேலாண் இயக்குனர்...
களியக்காவிளை பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் சாலை சீரமைக்கும் பணி தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மார்த்தாண்டம், நவ. 15: களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட குன்னுவிளை முதல் கைதக்குழி செல்லும் சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்ககோரி தாரகை கத்பர்ட் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ சேதமடைந்த சாலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பாக அமைச்சரிடம் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து ரூ.1 கோடியே 25...
வெள்ளிச்சந்தையில் விபத்தில் சிக்கிய அரசு பஸ் டிரைவர் பலி
குளச்சல்,நவ.15 : வெள்ளிச்சந்தை அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(55). இவர் செட்டிக்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வெள்ளிச்சந்தைக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ராஜ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர்...
ஆற்றூரில் நேரு பிறந்த நாள் விழா
கருங்கல், நவ.15 : ஆற்றூர் சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ் காந்தி சிலை முன் நேருவின் திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார்....
புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
புதுக்கடை, நவ. 13: புதுக்கடை அருகே தும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். இவரது நிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி பாறைகள் உடைப்பதாக, குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை கண்டவுடன்...