அருவிக்கரையில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை தொடங்கி வைத்தார்
குலசேகரம், ஆக.1: அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் உள்ள துணை சுகாதார நிலையம் இடவசதி இல்லாத சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு ரூ.45 லட்சம்...
குளச்சல் அருகே மீனவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
குளச்சல், ஆக. 1: குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் பிஜோஷியாம் (25). மீனவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனிஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிஜோஷியாம் அங்குள்ள ஆலயம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தனிஷ், சீலன்...
இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்களால் நோயாளிகள் அவதி அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அருமனை, ஜூலை 31: அருமனை அடுத்த இடைக்கோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு வசதி உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள்...
முட்டம் கடற்கரை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு
குளச்சல், ஜூலை 31: குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வள்ளங்களில் கறுப்புக்கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதில் அருட்பணி...
மார்த்தாண்டம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
திருவட்டார், ஜூலை 31: லயன்ஸ் கிளப் நிர்வாகிகளின் பதவியேற்பு விழா மார்த்தாண்டம் அருகே நடந்தது. விழாவிற்கு அமைப்பின் துணை தலைவர் டேனியல் பொன்னப்பன் தலைமை வகித்தார். மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் மாவட்டத்தின் முதல் துணை ஆளுநர் வெற்றிச்செல்வன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவிப்பிரமாணம் செய்து வைத்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்...
கிள்ளியூர் பேரூராட்சியில் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க தாமதம் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி
கருங்கல், ஜூலை 30 : கருங்கல் அருகே வேங்கோடு ஆயினிவிளையிலிருந்து வெட்டுவிளை செல்லும் சாலையில் ஆயினிவிளை ஏலா பகுதி வழியாக மின் பாதை செல்கிறது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பாதையில் மின் கம்பி அறுந்து ரோட்டில் விழுந்துள்ளது. சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது சம்மந்தமாக கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர் சுனில் மற்றும்...
குமரி மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
நாகர்கோவில், ஜூலை 30: குமரி மாவட்டத்தில் அரசு துறை சார்பில் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (30ம் தேதி) முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி நகராட்சி 14, 15 வது வார்டுக்கு...
சக்கர பரிவர்த்தன திருவிழா புனித பயணத்திற்கு மானியம்
நாகர்கோவில், ஜூலை 30 : கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26ம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள இசிஎஸ் முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை நேரடியாக மானியம்...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்கள்
நாகர்கோவில், ஜூலை 29: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட...