கிள்ளியூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் 100% நிறைவு
நாகர்கோவில், டிச.1: கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில்...
கடற்கரை கிராமங்களில் சீராக குடிநீர் விநியோகிக்க கோரி லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
குளச்சல்,நவ.29 : சைமன்காலனி ஊராட்சிக்குட்பட்ட சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கிராமங்களில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய கேட்பது, தெரு விளக்குகள் மற்றும் சாலைகளை சீரமைப்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் சைமன்காலனி ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.குளச்சல் வட்டார குழு தலைவர் ஜெனிதா தலைமை வகித்தார். மாநில...
தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா
தக்கலை,நவ.29: தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 52வது ஆண்டு விழா மதிப்புகளின் அடித்தளமாக ஞானத்தில் வளர்தல் என்ற கருத்தினை மையமாக வைத்து நடைபெற்றது. அமலா மறை மாநில தலைவி அருட்சகோதரி அமலோர் மேரி தலைமை வகித்தார். பள்ள தாளாளர் அருட்சகோதரி ஜெபா, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி லிற்றி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை தூய சவேரியார்...
நாகர்கோவிலில் விளம்பர,கட்சி பேனர்கள் அகற்றம் அதிகாரிகளுடன் முன்னாள் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
நாகர்கோவில், நவ.29 : நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள், அரசியல் கட்சி பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. இதில் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவரது மகள் கவுன்சிலர் லிஜா ஆகியோர் வைத்திருந்த பேனர்களும் சவேரியார் ஆலயம், செட்டிகுளம் பகுதிகளில் அகற்றப்பட்டது. இது பற்றி...
மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது
குளச்சல், நவ.28: மணவாளக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ. சதீஷ் மற்றும் போலீசார் படர்நிலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படர்நிலம் வயக்கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த மணி (56) என்ற ஒற்றைக்கண் மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை கைது...
கிள்ளியூர் பேரூர் திமுக சார்பில் உதயநிதி பிறந்த நாள் விழா
கருங்கல்,நவ.28: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிள்ளியூர் பேரூர் திமுக சார்பில், பேரூராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கு பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான சத்திய ராஜ் தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஜீவ ஜோதி முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள 50க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு...
மாற்று திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்பு குளச்சல் நகராட்சி
குளச்சல், நவ.28: தமிழக அரசு கடந்த தினங்களுக்கு முன்பு நகராட்சி, பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியில் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்த ஸ்டான்லி (55) என்பவரை நகராட்சி நிர்வாக இயக்குனர் நியமனம் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கன்னியப்பன் பதவி பிரமாணம் செய்து...
கொட்டாரம் அருகே குடை பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண் கீழே விழுந்து படுகாயம்
நாகர்கோவில், நவ. 27: கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (59). ரோடு ரோலர் டிரைவர். இவரது மனைவி ராதிகா (55). சம்பவத்தன்று செந்தில் ஆறுமுகம், அவரது மனைவி ராதிகாவுடன் கொட்டாரம் பத்திரப்பதிவு அலுவலக ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை தூறி கொண்டு இருந்தது. ராதிகா பைக்கில் பின்னால் குடை...
அருமனை அருகே பரபரப்பு சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தாய், மகள் தர்ணா போராட்டம்
அருமனை, நவ.27: அருமனை அருகே கடையால் பிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தற்போது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 20 சென்ட் நிலம் பிலாந்தோட்டம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சுரேஷ்குமார், அவரது சகோதரர்கள், அக்காள் கீதாகுமாரி ஆகியோருக்கு சரி பாதியாக பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது....