பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்

  பல்லாவரம், ஜூலை 18: பம்மலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை...

திருப்போரூர் எவர்கிரீன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

By Ranjith
17 Jul 2025

  திருப்போரூர், ஜூலை 18: திருப்போரூர் வணிகர் வீதியில் எவர்கிரீன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் உஷா குமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்போரூர் காவல் ஆய்வாளர் இராஜாங்கம் பங்கேற்று, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை...

மேற்கூரை இடிந்து விழுந்த அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

By Ranjith
17 Jul 2025

  மதுராந்தகம், ஜூலை 18: அரசு பள்ளி மேற்கூரை விழுந்து மாணவர்கள் காயம் ஏற்பட்டதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து அய்வு நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் வசதிக்காக ரூ.33...

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

By Ranjith
16 Jul 2025

  செங்கல்பட்டு, ஜூலை 17: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் சப்-கலெக்டர், வருவாய்...

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தனியார் கம்பெனி ஊழியர் கைது

By Ranjith
16 Jul 2025

  வளசரவாக்கம், ஜூலை 17: சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ேநற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க பெண் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, அரும்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கியபோது ஒருவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். பின்னர், அந்த நபர் திடீரென ஆபாச சைகை காண்பித்ததால் அதிர்ச்சி அடைந்தேன். எதற்காக என்னை பார்த்து ஆபாச...

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான தலைமையாசிரியர்கள் அடைவு தேர்வு ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

By Ranjith
16 Jul 2025

  காஞ்சிபுரம், ஜூலை 17: காஞ்சிபுரம் பிவிஏ பன்னாட்டு பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று,...

காமராஜர் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

By Ranjith
15 Jul 2025

  மதுராந்தகம், ஜூலை 16: செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை(பொறுப்பு) அருள் செல்வி தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுஜாதா பாரதி பாபு, கல்வி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர்...

ஏடிஎம் மிஷின்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் திருட்டு: தலைமறைவான ஊழியருக்கு வலை

By Ranjith
15 Jul 2025

  தாம்பரம், ஜூலை 16: தேனாம்பேட்டையில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் சிஎம்எஸ் இன்போ சிஸ்டம் என்ற பெயரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது....

மேல்மருவத்தூர் அருகே புல்வெளியில் திடீர் தீ

By Ranjith
15 Jul 2025

  மதுராந்தகம், ஜூலை 16: மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புற்கள் நிறைந்த பகுதி தீப்பிடித்து எரிந்ததால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நன்கு வளர்ந்து புல்வெளி பகுதி...

நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்காததால் பொதுமக்களிடம் நிதி திரட்டி பாசி குளம் தூர்வாரி சீரமைப்பு

By Arun Kumar
14 Jul 2025

  மாமல்லபுரம், ஜூலை 15: மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட, வடக்கு மாமல்லபுரம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் இசிஆர் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள சோழி பொய்கை குளக்கரையை ஒட்டி ஆதிதிராவிடர் மக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு காரிய மேடை உள்ளது. தற்போது, அந்த குளக்கரையையொட்டி மாமல்லபுரம்-புதுச்சேரி வரை 4 வழிச்சாலை...