இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாலாஜாபாத் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி
வாலாஜாபாத், நவ.11: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் அருகில் உள்ள...
காஞ்சி குமரகோட்டம் கோயிலில் அனுமதியின்றி வேல் பூஜை இந்து அமைப்பினர் கைது: போலீசாருடன் வாக்குவாதம்
காஞ்சிபுரம்,நவ.11: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வேலுடன் வந்து கோயில் பூஜை செய்து கந்த சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்திட இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுமதி அளிப்பதாக கூறிய நிலையில் நேற்று கோயில் நிர்வாகம் திடீரென...
கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
துரைப்பாக்கம், நவ.11: சென்னை மாநகராட்சி, 196வது வார்டு அதிமுக கவுன்சிலர் அலுவலகம் மற்றும் வார்டு அலுவலகம், கண்ணகி நகரில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த முனியா (50) என்பவரின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. கவுன்சிலர் அலுவலகம் வழியாக சென்றபோது, இறுதி...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம் - வெள்ளி பல்லி சிலைகள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது: இந்து சமய அறநிலையத்துறை தகவல்
காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம்-வெள்ளி பல்லி சிலைகள் தரிசனத்திற்கு இருந்த இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(3)-ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட முதுநிலை கோயிலாகும். இக்கோயில் வரதராஜ...
கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
குன்றத்தூர், நவ.7: குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர், திடீரென சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் இரும்பு கம்பியை எடுத்து, தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில், கழுத்து அறுபட்டு ரத்தம் அதிகளவில் கொட்டத் தொடங்கியது. இதனைக்கண்டதும் பேருந்திற்காக காத்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவல்...
காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை
காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 என நாட்கள் வெயில் சுட்டெரித்த நிலையில், திங்கட்கிழமை திடீரென கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி, வெள்ளி பல்லி மாற்றப்படுவதாக புகார்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
காஞ்சிபுரம். நவ.6: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி, வெள்ளி பல்லி மாற்றப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில், வரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படும், தேவராஜ சுவாமி கோயிலில்...
வார இறுதி நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: 15 ஆயிரம் பேர் முன்பதிவு போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, நவ.6: வார இறுதி நாட்களையொட்டி நாளை முதல் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க இதுவரை 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகைக் காலம், முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு...
குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கேமராக்கள்: காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சாய் பிரினித் ஆய்வு
செங்கல்பட்டு, நவ.6: குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சாய் பிரனித் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு காவல் எல்லைக்கு உட்பட்டு செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய டிஎஸ்பி அலுவலகமும் அதன் கீழ் சட்டம் ஒழுங்கு மதுவிலக்கு மகளிர் உள்பட 20 காவல் நிலையங்கள் உள்ளன....