துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது
சென்னை, நவ. 22: துபாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.80 கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்க கட்டிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து தனியார் பயணிகள்...
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.8.73 லட்சம் பயிர் கடன்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்
காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு,...
தாம்பரம் அரசு மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த முதியவரால் பரபரப்பு
தாம்பரம், நவ.21: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அடுத்த பம்மல், பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அம்பிகாபதி (56). இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில்...
இளநிலை பொறியாளர் தற்கொலை வழக்கு பணிமனை கிளை மேலாளர் உள்பட இருவருக்கு வலை
தாம்பரம், நவ.21: தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக இளநிலை பொறியாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவான பணிமனை கிளை மேலாளர் மற்றும் எச்ஆர்டி பெண் அலுவலர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஆதனூர் ஜவகர் ஐயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (40). இவர் தாம்பரம்...
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.85.20 லட்சம் மதிப்புள்ள 710 கிலோ கஞ்சா அழிப்பு
செங்கல்பட்டு, நவ.21: தாம்பரம் மாநகர காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.85.20 லட்சம் மதிப்பிலான 710 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டும் மையத்தில் தீவைத்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பள்ளிக்கரணை...
பாதாள சாக்கடை அடைப்பால் மாமல்லபுரம் கடற்கரையில் தேங்கும் கழிவுநீர் கடலில் கலக்கும் அவலம்: சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரம், நவ.19: மாமல்லபுரம் கடற்கரையில் கழிவுநீர் தேங்கி நின்று, கடலில் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னைக்கு அருகே 60 கிமீ தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மாமல்லபுரம் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய...
வேறொரு ஆணுடன் செல்போனில் பேசியதால் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: *கணவன் கைது *மதுராந்தகம் அருகே பயங்கரம்
மதுராந்தகம், நவ.19: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் (24). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மதுமிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பை...
நாய்க்குட்டிகளை 3வது மாடியிலிருந்து வீசி கொன்ற வடமாநில தொழிலாளி
தாம்பரம், நவ.19: தாம்பரம் அருகே 3வது மாடியில் இருந்து நாய்க்குட்டிகளை கீழே தூக்கி வீசி கொன்ற வடமாநில தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலையூர் அடுத்த வேங்கைவாசல், சிவபூஷணம் நகர், 6வது தெருவில் 3 அடுக்கு கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில்,...
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
குன்றத்தூர், நவ.18: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து திடீரென சென்னை...