துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்கள் பறிமுதல்: சென்னை பயணியிடம் சுங்கத்துறை விசாரணை
மீனம்பாக்கம், ஜூலை 30: துபாயில் இருந்து தனியார் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த சென்னையை சேர்ந்த 42 வயது ஆண் பயணி மீது...
செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
காஞ்சிபுரம், ஜூலை 30: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையின்படி, பாலாறு மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால்...
இனப்பெருக்க காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு பறவைகள் சென்றதால் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
மதுராந்தகம், ஜூலை 29: இனப்பெருக்க காலம் முடிந்து, குஞ்சுகள் பெரிதானதை தொடர்ந்து, பறவைகள் சொந்த நாடுகளுக்கு சென்றதால் பறவைகள் இன்றியும், பார்வையாளர்கள் இன்றியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 16 அடி உயரம்....
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு முகாம்: தாம்பரத்தில் நடக்கிறது
காஞ்சிபுரம், ஜூலை 29: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை சார்பில் அக்னிவீர் வாயு வகுப்பிற்கான சிறந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தேர்வு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு (விஜயபுரம்) ஆகிய பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த...
திருப்போரூர் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்போரூர், ஜூலை 29: திருப்போரூர் பேரூராட்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், ஓட்டல்கள், டீ கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், டம்ளர்கள், கவர்கள் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிக்கு தகவல் வந்தது. அதன்பேரில், செயல் அலுவலர் சங்கீதா தலைமையில்...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
போரூர்: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் ராஜேஷ்...
காவல் துறை வாகனங்கள் ஏலம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட மூன்று மற்றும் 6 இரு சக்கர காவல் வாகனங்கள் மேலும் நான்கு சக்கர காவல் வாகனங்களை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 31.7.2025ம் தேதி காலை...
காஞ்சிபுரம் 32வது வார்டில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: எஸ்பி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க விதமாக பிரதான இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 9 தெருக்களில் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரும்...
சவ ஊர்வலத்தின் போது நாட்டு பட்டாசு வெடித்து பள்ளி மாணவி படுகாயம்
துரைப்பாக்கம், ஜூலை 26: அக்கரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார் (38), தனியார் நிறுவன பாதுகாப்பு பிரிவு மேலாளர். இவரது மனைவி சகாயமேரி. இவர்களது மூத்த மகள் நிஷாந்தினி (10), வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது...