செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் 4 ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு

செங்கல்பட்டு, ஆக. 3: செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் சுமார் 4 ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் எரித்து அகற்றினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனைகள் மூலம் கஞ்சா கடத்தலில்...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

By Karthik Yash
01 Aug 2025

காஞ்சிபுரம், ஆக.2: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அறங்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து ஜாதி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இந்த, கோயிலின் அறங்காவலராக கடந்த 2023ம்...

நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

By Karthik Yash
01 Aug 2025

பெரும்புதூர், ஆக. 2: நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் வெங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை மற்றும் நாவலூர் கிராம தன்னார்வலர்கள் இணைந்து 400 மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கொளத்தூர்...

மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

By Karthik Yash
01 Aug 2025

திருப்போரூர், ஆக.2: செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் திருப்போரூரில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் செப்.15ம் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் திரளாக கலந்துக்கொள்ளுதல், 2026ம் ஆண்டு...

ஜெயலலிதா, சசிகலா அபகரித்த நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்கக்கோரி மா.கம்யூ கட்சியினர் குடியேறும் போராட்டம்

By Karthik Yash
31 Jul 2025

திருப்போரூர், ஆக.1: திருப்போரூர் அருகே ஜெயலலிதா, சசிகலா அபகரித்த நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்கக்கோரி மா.கம்யூ கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள் 20 பேருக்கு, தலா 2 ஏக்கர் நிலம், 10 சென்ட் குடியிருப்பு...

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு முகாம்

By Karthik Yash
31 Jul 2025

செங்கல்பட்டு, ஆக. 1: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை சார்பில், தாம்பரத்தில் உள்ள விமானப்படை தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாமில், ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வரும் செப்.2ம் தேதியும், ெபண் விண்ணப்பதாரர்களுக்கு செப். 5ம் தேதியும் முகாம் நடக்கவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள 50 சதவீத...

அஞ்சல் சேவைகள் சம்பந்தமான விற்பனை நிலையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: தபால் நிலைய கண்காணிப்பாளர் தகவல்

By Karthik Yash
31 Jul 2025

காஞ்சிபுரம், ஆக. 1: காஞ்சிபுரம் தலைமை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாாவது: அஞ்சல் சேவையை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் விற்பனை நிலையங்களை திறக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள், அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்களை அஞ்சல் துறை வரவேற்கிறது. தபால் தலைகள் விற்பனை, துரித அஞ்சல் முன்பதிவு, பதிவு...

திருப்போரூர் கந்தசுவாமி ேகாயில் நிர்வாகம் தரம் உயர்த்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

By Karthik Yash
30 Jul 2025

திருப்போரூர், ஜூலை 31: திருப்போரூர் கந்தசுவாமி ேகாயில் நிர்வாகத்தின் தரம் உயர்த்த வேண்டும் என்று பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்த்துள்ளார். சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான கந்தசாமி கோயில் உள்ளது. கடந்த, 17ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில் ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு...

திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்

By Karthik Yash
30 Jul 2025

திருப்போரூர், ஜூலை 31: திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் தெற்கு மாடவீதியில் கடந்த 1886ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், இ.சி.ஆர். சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட...

வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

By Karthik Yash
30 Jul 2025

வாலாஜாபாத், ஜூலை 31: வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டொன்று உள்ளதை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின்...