கூட்டுறவு கடன் சங்கத்தை பிரிக்கும் முடிவை கைவிட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

  ஈரோடு,ஜூலை11: பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஈரோடு மாவட்டம்,பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம், காடபாளையத்தில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. நல்ல முறையில் செயல்பட்டு வரும் இந்த கடன் சங்கத்தை...

பிளஸ்- 2 துணைத் தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

By Ranjith
09 Jul 2025

  ஈரோடு,ஜூலை10: ஈரோட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி துவங்கி 2ம் தேதி வரை நடந்தது. இதேபோல் பிளஸ் 1 துணை தேர்வு கடந்த ஜூலை 4ம் தேதி துவங்கி, நாளையுடன் நிறைவடைய உள்ளது. 10ம் வகுப்பு துணைத் தேர்வு...

தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? தெலங்கானா இளம்பெண் இறப்பு குறித்து ஆர்டிஓ விசாரணை

By Ranjith
09 Jul 2025

  ஈரோடு,ஜூலை10:தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சிவக்குமார்.இவரது மனைவி மாதவி (24). கடந்த 2021ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6ம் தேதி, ரங்கரெட்டி மாவட்டத்தில் இருந்து சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜெனரல் பெட்டியில் கோவை செல்ல மாதவி பயணித்துள்ளார். கடந்த 7ம்...

பணித்தள பொறுப்பாளரை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

By Ranjith
09 Jul 2025

  சத்தியமங்கலம், ஜூலை 10: பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் விண்ணப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக மதி என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவர்...

கொடுமுடி பேரூராட்சி தலைவர் தகுதி நீக்கம்

By Arun Kumar
08 Jul 2025

  மொடக்குறிச்சி, ஜூலை 9: கொடுமுடி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்று தலைவர் நீக்கம் என அரசிதழில் வெளியிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் முறையாக தகவல்கள் அனுப்பவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில்,...

பவளமலை பகுதியில் வருவாய்த்துறை நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

By Arun Kumar
08 Jul 2025

  கோபி, ஜூலை 9: கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி, பவளமலை பிரிவில் இருந்து எஸ்.பி.நகர் சந்திப்பு வரை பலரும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் அமைத்தும், வேலி அமைத்தும் பயன்படுத்தி வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிட பலமுறை வருவாய்த்துறையினர் அறிவிப்பு செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் நேற்று...

லாட்டரி, குட்கா, கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை

By Arun Kumar
08 Jul 2025

  ஈரோடு, ஜூலை 9: ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் கோவை சரக டிஐஜி சசிமோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பல்வேறு அறைகளை பார்த்தார். தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக பதிவான வழக்குகள்,...

குப்பைகளை அகற்ற கோரிக்கை அனைத்து தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் மனு

By Arun Kumar
07 Jul 2025

  ஈரோடு,ஜூலை8: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தற்சமயம் அரசால் அனுமதிக்கப்படாத ரேபிடோ எனும் இருசக்கர பைக் டாக்சிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இது போக்குவரத்து சட்ட விதிகளுக்கு முரணானது ஆகும்....

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

By Arun Kumar
07 Jul 2025

  ஈரோடு,ஜூலை 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான வயது வரம்பு 2025ம் ஆண்டு 30-4-2025ன் படி 58 வயது பூர்த்தி அடைந்தவராக...

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை

By Arun Kumar
07 Jul 2025

  ஈரோடு,ஜூலை 8: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று, ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட ஆயப்பாளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்டது கங்காபுரம், ஆயப்பாளி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்கு கடந்த பல வருடங்களாக சாக்கடை வசதி இல்லை....