இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சங்கமேஸ்வரர் கோயிலில் 12 மூத்த தம்பதிகள் கவுரவிப்பு
பவானி, நவ. 18: பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் கோயில், செல்லியாண்டியம்மன் கோயில் சார்பில் தலா 6 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்புள்ள வேட்டி, சட்டை, புடவை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,...
குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 8 பேர் கைது
ஈரோடு, நவ.18: ஈரோடு மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற, பவானி அடுத்த நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (55), ராமசிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி...
சிஎஸ்ஐ பள்ளியில் குழந்தைகள் தின விழா
ஈரோடு, நவ.15: ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் பிராங்கிளின் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், விடுதலை...
மாஜி அரசு ஊழியர் தற்கொலை
ஈரோடு, நவ.15: பெருந்துறை அடுத்த வெங்கமேட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கபிள்ளை (71). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், கடந்த 13ம் தேதி மதுப்போதையில் இருந்துள்ளார். அப்போது, தென்னை மரத்திற்கு வைத்திருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,...
மலைக்குன்றில் பதுங்கிய சிறுத்தை விவசாய தோட்டத்தில் நடமாட்டம்?
சத்தியமங்கலம், நவ.15: புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலைக்குன்றில் பதுங்கியுள்ள இரண்டு சிறுத்தைகளில் ஒரு சிறுத்தை விவசாய தோட்டத்தில் நடமாடியதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் கிராமத்தில் பட்டப் பகலில் புகுந்து ஆடுகளை வேட்டையாடியதோடு...
கோபி அருகே மூதாட்டி சடலம் மீட்பு
ஈரோடு, நவ.13: கோபி அடுத்த மொடச்சூர் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக, மொடச்சூர் விஏஓ சுரேஷிற்கு, அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த சுரேஷ், கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....
ஈரோட்டில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெறுகின்றன
ஈரோடு, நவ. 13: தமிழ் நாட்டில், தொடக்க கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, கல்வித் துறையில் உள்ள உயர்மட்டக்குழு ஆய்வு செய்து, அதில் 3 பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி,...
அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் பலி
ஈரோடு, நவ.13: ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்தவர் முகமது குத்துசூல் யாசர் அராபத் (40). இவர் தனக்கு திருமணமாகாத விரக்தியில் 2005ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டார். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், மனநல பாதிப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை அவர் சாப்பிட்டுள்ளார். மயக்க...
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
ஈரோடு, நவ.12: திருப்பூர் மாவட்டம் பெரிய ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (75). இவர், கடந்த 9ம் தேதி சின்ன ஒட்டர்பாளையத்தில் ஆடு, எருமைகளை மேய்க்க சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு வராததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, அங்கிருந்த காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடராஜனின் கைத்தடி இருந்தது. இது...