தாளவாடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்: நீலகிரி எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார்
சத்தியமங்கலம், ஜுலை 4: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் வாக்குச்சாவடிதோறும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு...
கொடிசியா மைதானத்தில் அண்டர் வாட்டர் டனல் டபுள் டக்கர் அக்வாரியம்: கண்ணை கவரும் கடல் கன்னிகள், மீன்கள், பறவைகள்
கோவை கொடிசியா மைதானத்தில் அண்டர் வாட்டர் டனல் டபுள் டக்கர் அக்வாரியம் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியின் முகப்பில் பிரமாண்டமான ஆக்டோபஸ் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக அரங்கிற்குள் நுழைந்தவுடன் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவைகள் பறந்து கொண்டிருக்கும். இது ஒரு பறவைகளின் சரணாலயத்திற்குள் சென்ற அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. இப்பகுதியில்...
ஈரோடு பாரதிதாசன் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி
ஈரோடு, ஜூலை 3: ஈரோடு அருகே எல்லிஸ் பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் என்.கே.கே. பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் இணை செயலாளர்கள், நிர்வாக அலுவலர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வானதி தொடக்க உரையாற்றினார். இதில் கோவை...
மாநில நீச்சல் போட்டியில் எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி பள்ளி மாணவிக்கு தங்கம்
ஈரோடு, ஜூலை 3: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி - 2025, ஓசூரில் நடைபெற்றது. இதில், ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜினி கலந்துகொண்டு 2 தங்கப் பதக்கங்கள்,...
சாலையோர வனப்பகுதியில்
சத்தியமங்கலம், ஜுலை 2: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் வனப்பகுதி சாலையில் செல்லும்போது பாலித்தீன் காகிதங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சாலை ஓர வனப்பகுதியில் வீசுகின்றனர். யானை, மான்,...
கொடுமுடியில் நாளை மின் தடை
ஈரோடு, ஜூலை 2: ஈரோடு மாவட்டம் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(3ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி...
வாட்டர் பெல்’ திட்டம் ஆசிரியர், மாணவர்கள் வரவேற்பு
ஈரோடு, ஜூலை 2: ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவைகளை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோட்டில் சத்தி ரோடு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி ரோடு, ஈ.வி.என் ரோடு ஆகிய பகுதிகள் அதிக பொதுமக்கள் நடமாட்டம் கொண்டது. இச்சாலையை ஒட்டி, பெரிய வணிக நிறுவனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. பொங்கல், தீபாவளி,...
சிவகிரி பகுதியில் கோவேறு கழுதை பால் அமோக விற்பனை
மொடக்குறிச்சி, ஜூலை 1: சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோவேறு கழுதை பால் விற்பனை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதிகளில் அவ்வப்போது நாட்டு கழுதை பால் நடந்துள்ளது. தற்போது திருச்சியை சேர்ந்த சில வாலிபர்கள் 10 கோவேறு கழுதைகளை குட்டிகளுடன் இந்த பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் தெருத்தெருவாக...
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கோபி, ஜூலை 1: கோபி பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. கோபி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது....