கஞ்சா விற்ற 4 பேர் கைது

  ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு மரப்பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம், சுபமபூர் கொட்ச மலை பகுதியை சேர்ந்த தீபராஜ் தாபா (22), என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில்...

வெண்டிபாளையம் கதவணை மதகுகளில் நீர் திறப்பு

By Arun Kumar
06 Jul 2025

  ஈரோடு, ஜூலை 7: ஈரோடு வெண்டிபாளையம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது. தொடர் மழை எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அணைகளில்...

தார்சாலையை முழுமையாக சீரமைக்க கோரிக்கை

By Arun Kumar
06 Jul 2025

  ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மாநகராட்சி, 19வது வார்டில் உள்ளது நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை போஸ்டல் நகர், முதல் வீதி. தொடங்கும் இடத்தின் அருகில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலையில் குழி தோண்டப்பட்டு பழுது நீக்கப்பட்ட து. தொடர்ந்து, குடிநீர் இணைப்புக்காக நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை...

ரூ.3.99 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.பி துவக்கி வைத்தார்

By Arun Kumar
05 Jul 2025

  மொடக்குறிச்சி, ஜூலை 6: மொடக்குறிச்சி பேரூராட்சியில் தார் சாலை, கான்கிரீட் சாலை, வடிகால் வசதி என ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு கே.ஈ பிரகாஷ் எம்.பி பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்தி பாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்காட்டு தோட்டம், செந்தூர் நகர், அண்ணா நகர்,...

வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி

By Arun Kumar
05 Jul 2025

  ஈரோடு, ஜூலை 6: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அமராவதி புதூரில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், கொளத்துப்பாளையம் விஏஓ சிவசங்கர் மற்றும் கொடுமுடி போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவருக்கு சுமார்...

வாலிபரை மிரட்டி நகை, பணம் வழிப்பறி செய்த 4 பேர் கைது

By Arun Kumar
05 Jul 2025

  பவானி, ஜூலை 6: சித்தோடு அருகே வாலிபரை மிரட்டி நகை, பணம் வழிப்பறி செய்த திருப்பூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோட்டை அடுத்த வடமுகம் வெள்ளோடு, கவுண்டன்பாளையத்த சேர்ந்தவர் கமலேஷ் (23). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ம் தேதி பைக்கில் சென்ற இவர், சிறுநீர் கழிப்பதற்காக...

ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி வகுப்புகள்

By Arun Kumar
04 Jul 2025

  ஈரோடு, ஜூலை 5: ஈரோடு, பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயிலில் புதிய யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. நாளை மறுதினம் 7ம் தேதி (திங்கட்கிழமை) துவங்கி 21ம் தேதி வரை காலை 7 மணி முதல் 8:30 மணி வரை ஒரு பயிற்சி வகுப்பும், இதே தேதியில் பெண்களுக்கு...

வேட்டைகாரன் கோயில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தம்

By Arun Kumar
04 Jul 2025

  கோபி, ஜூலை 5: கோபி அருகே உள்ள வேட்டைகாரன் கோயில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. கோபி அருகே உள்ள வேட்டைகாரன் கோயில் வாய்க்கால்மேட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இரவு நேரங்களில் கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பைகளை மர்ம நபர்கள் வீசி செல்கின்றனர். இதனால், வாய்க்கால் அசுத்தமாவதுடன் பாசனத்திற்கு பயன்படுத்தும்...

ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு

By Arun Kumar
04 Jul 2025

  ஈரோடு, ஜூலை 5: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 9ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்ததில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஈரோட்டில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்க திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு...

பண்டல் பண்டலாக குட்கா பறிமுதல்

By Arun Kumar
03 Jul 2025

  ஈரோடு, ஜூலை 4: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை எதிர்புறம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை எஸ்ஐ பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அங்கு அதிரடியாக சென்று சோதனை செய்தனர். இதில், வீட்டில் பண்டல் பண்டலாக...