பவானி தெற்கு நகர திமுக செயலாளர் மறைவு: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் அஞ்சலி
பவானி, டிச. 10: திமுகவில் சிறந்த நகரச் செயலாளர் விருது பெற்ற, பவானி தெற்கு நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். கடந்த 25 வருடங்களாக பவானி நகர திமுக செயலாளராக பதவி வகித்து வந்த இவர், திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக...
மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்
ஈரோடு, டிச. 10: மதவெறிக்கு எதிராக ஈரோடு நகரில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஈரோடு நகரில் உள்ள பிரதான சாலைகளான மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை ரோடு, காந்திஜி ரோடு, திருமகன் ஈவெரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மதவெறிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், சமீபத்திய திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிடும் வகையில், ‘அமைதி நிலவும் தமிழ்நாட்டில்...
குறைதீர்க்கும் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பெற்றன உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ஈரோடு, டிச.9: ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், விலையில்லா தையல் இயந்திரம், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை...
அந்தியூர் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தது
அந்தியூர்,டிச.9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடம் தமிழக முதல்வரால் கடந்த வாரம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. புதிய மருத்துவமனை கட்டிடம் நேற்று முதல் செயல்பட துவங்கியதை முன்னிட்டு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி...
பொது இடத்தில் மது குடித்த 2 வாலிபர்கள் மீது வழக்கு
அந்தியூர், டிச.9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள ஆப்பக்கூடல் சந்தைபேட்டை செல்லும் சாலையில் ஆப்பக்கூடல் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த ஆப்பக்கூடல் சக்திநகர் காமராஜ் காலனியைச் சேர்ந்த தாமோதிரன் (25), ஹரிவிக்னேஷ் (24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ...
புகையிலை பொருள்கள் மது விற்ற 2 பேர் கைது
ஈரோடு, டிச. 8: ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன் வெங்கடாசலம் வீதி பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான ஈரோடு, ராமசாமி வீதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (45) என்பவர் மீது...
மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் ரூ.900க்கு விற்பனை
ஈரோடு, டிச.8: ஈரோடு ஸ்டோனி பாலம் மற்றும் கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகளில் கடல் மீன்கள் மற்றும் அணை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தைவிட நேற்று மீன்கள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்கள் விலை கிலோ ரூ.50 முதல்...
புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா
ஈரோடு, டிச.8: ஈரோடு, கால்நடை மருத்துவமனை சாலையில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. பழமையான இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி...
பூசாரி தத்தெடுத்த 3 மாத ஆண் குழந்தை திடீர் சாவு
ஈரோடு, டிச. 7: ஈரோடு மாவட்டம், கொடுமுடி குள்ளக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜா (30). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள விநாயகர் கோயில் பூசாரி. இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும், குழந்தை இல்லை. இதனால், கோயிலுக்கு வரும் சென்னையை சேர்ந்த சுப என்ற பெண், அவருக்கு தெரிந்தவர்கள்...