இ-பைலிங் முறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

  ஈரோடு, டிச. 5: இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இ-பைலிங் முறை கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்நிலையில் இ-பைலிங் முறையை கண்டித்து, ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சுந்தர் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சார்பில், நீதிமன்ற...

நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

By Arun Kumar
04 Dec 2025

  மொடக்குறிச்சி, டிச.5: நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு தினசரி அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. 30ம் தேதி...

ஜம்பை-நல்லிபாளையம் சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு

By Arun Kumar
02 Dec 2025

  பவானி, டிச.3: பவானியை அடுத்த ஜம்பை-நல்லிபாளையம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஜம்பை-நல்லிபாளையம் சாலை ஒரு வழித்தடத்தை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.1.10...

பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

By Arun Kumar
02 Dec 2025

  ஈரோடு, டிச.3: ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் மது அருந்திய வெள்ளித்திருப்பூர், ஆண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (37) மீது வழக்குப் பதிந்து கைது...

ஈரோடு ஜவுளிச்சந்தையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை தொடக்கம்

By Arun Kumar
02 Dec 2025

  ஈரோடு, டிச.3: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 230 மனுக்கள்

By Arun Kumar
01 Dec 2025

  ஈரோடு, டிச. 2: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ச.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்...

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ரேபிஸ் தடுப்பூசி

By Arun Kumar
01 Dec 2025

  ஈரோடு, டிச. 2: ரேபிஸ் நோய் என்பது வைரஸ் தாக்குதல். இது, மனித நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர் கொல்லி நோயாகும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாகவோ, அவற்றின் எச்சில் வழியாகவோ மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமாகவே மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது....

சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்

By Arun Kumar
01 Dec 2025

  சத்தியமங்கலம், டிச.2: சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சந்தன மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்தும் கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் புதூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி...

பழனி முருகன் கோயிலுக்கு ரூ.39 லட்சம் நாட்டு சர்க்கரை கொள்முதல்

By MuthuKumar
30 Nov 2025

ஈரோடு,டிச.1: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,...

கொடுமுடி காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் மூழ்கி பலி

By MuthuKumar
30 Nov 2025

கொடுமுடி, டிச.1: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது வெங்கம்பூர். இங்குள்ள வடக்குபுதுப்பாளையம் தண்ணீர்பந்தலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சம்பத் (30). இவரது நண்பர் பூவேந்திரன் (41). இவர்கள் 2 பேரும் நேற்று பைக்கில் காசிபாளையம் காவிரி ஆற்றுப் படித்துறைக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது மதுபோதையில் ஆற்றில் இறங்கிய சம்பத் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சம்பவ...